Asianet News TamilAsianet News Tamil

பெற்ற மகளுக்கே துரோகம்... மருமகனை வீட்டிற்கே வரவழைத்து தனி அறையில் மாமியார் உல்லாசம்... அடித்து கொலை.

மகளுக்கு புதிதாக திருமணமான நிலையில் மருமகனுடன் மாமியார் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாமியார்- மருமகன் மீது பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் மாமியார் உயிரிழந்துள்ளார். 

Mother-in-law sexual releation with son-in-law in west bengal. and murder.
Author
West Bengal, First Published Jul 20, 2022, 3:47 PM IST

மகளுக்கு புதிதாக திருமணமான நிலையில் மருமகனுடன் மாமியார் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாமியார்- மருமகன் மீது பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் மாமியார் உயிரிழந்துள்ளார். இக்கொடூர சம்பவம் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடந்துள்ளது.

கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பர நம்பிக்கை, உறவு இல்லாதவர்கள், திருமணத்திற்கு புறம்பான வழியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வழியில் நடப்பவர்கள், பெரும்பாலும் கொலை தற்கொலை போன்ற முடிவுகளுக்கு  தள்ளப்படும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் மகளைத் திருமணம் செய்து வைத்து விட்டு மாமியார் மருமகனுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- 

Mother-in-law sexual releation with son-in-law in west bengal. and murder.

மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நர்சிபிபி  என்ற பெண் தனது மகளை மொஃபிசுல் மொண்டோல்  என்ற இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணமான சில வாரங்கள் மகிழ்ச்சியாக இருந்த அவர்கள் இடையே  தகராறு ஏற்பட்டு வந்தது. இதே நேரத்தில் மாமியார் மருமகன் மீது அதிக நெருக்கம் காட்ட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் மனைவியை காட்டிலும் மாமியார் மீது மருமகனுக்கு  ஈடுபாடு அதிகமான, இதனால் மருமகனே வீட்டுக்கே வரவழைத்த மாமியார் மருமகனுடன் உல்லாசம் அனுபவித்து வந்தார். இதன் காரணமாக மகளுக்கும் மருமகனுக்கும் மேலும் தகராறு அதிகமானது. மாமியார் மருகன் இடையேயுள்ள உறவு வெளிச்சத்திற்கு வந்தது.

இதையும் படியுங்கள்: மது போதையில் ஓங்கி அடித்த கணவன்.. மனைவி செய்த விபரீத சம்பவம் - வெளியான அதிர்ச்சி காரணம்.!

இதனையடுத்து ஊர் தலைவர்கள் பஞ்சாயத்து செய்து கணவன் மனைவியை சேர்ந்து வாழ அறிவுறுத்தினர்,  மேலும் மாமனார் வீட்டில் இல்லாத போது வீட்டிற்கு வர வேண்டாம் என்றும் மருமகனுக்கு அறிவுறுத்தினர். ஆனால் இதை அவர்கள் இருவருமே பொருட்படுத்தவில்லை, இந்நிலையில் வழக்கம்போல மாமியார் வீட்டில் தனியாக இருக்கும்போது வீட்டிற்கு வந்த மருமகன், வீட்டில் யாரும் இல்லாததால் மாமியாருடன் அறையில் உடலுறவில் ஈடுபட்டார். ஆனால் இதை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கவனித்து விட்டனர். உடனே நர்சிபிபி  வீட்டிற்கு வெளியில் திரண்ட தெருமக்கள் தடி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவர்களை வெளியை இழுத்து போட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதையும் படியுங்கள்: உங்கள் எம்.பி கெஸ்ட் அவுசுக்கு அழைத்துச் சென்று பலமுறை உடலுறவில் ஈடுபட்டார்.. முதல்வரிடம் கதறும் துபாய் பெண்

Mother-in-law sexual releation with son-in-law in west bengal. and murder.

அதில் மாமியார் மயக்கமடைந்தார், பின்னர் அவர் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டார், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இந்நிலையில் மருத்துவமனையில் மருமகனுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஊர் பொதுமக்கள் மீது மருமகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் முர்ஷிதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios