Asianet News TamilAsianet News Tamil

52 வயது மனைவியின் நடத்தையில் சந்தேகம்..! உயிருடன் தீவைத்து கொளுத்திய கணவன்..!

நேற்றும் வீட்டில் வைத்து கணவன் மனைவி இடையே சண்டை நடந்துள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த புஷ்பதாஸ், கம்பால் மனைவியை சரமாரியாக தாக்கி இருக்கிறார். மேலும் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து மனைவி மீது ஊற்றி உயிருடன் தீ வைத்து கொளுத்தி இருக்கிறார். அதிர்ச்சியடைந்த இரக்கம், தீயுடன் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

man burnt his wife alive
Author
Thovalai, First Published Feb 17, 2020, 12:11 PM IST

நாகர்கோவில் மாவட்டம் தோவாளை அருகே இருக்கிறது புதூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் புஷ்பதாஸ்(56). இவரது மனைவி இரக்கம்(52). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தமகளுக்கு திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார். இளையமகள் மதுரையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். புதூரில் இருக்கும் வீட்டில் கணவன் மனைவி மட்டும் தனியாக வசித்து வந்தனர்.

man burnt his wife alive

இந்தநிலையில் மனைவியின் நடத்தை மீது புஷ்பதாஸிற்கு சந்தேகம் இருந்திருக்கிறது. இதனால் இருவரிடையேயும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. நேற்றும் வீட்டில் வைத்து கணவன் மனைவி இடையே சண்டை நடந்துள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த புஷ்பதாஸ், கம்பால் மனைவியை சரமாரியாக தாக்கி இருக்கிறார். மேலும் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து மனைவி மீது ஊற்றி உயிருடன் தீ வைத்து கொளுத்தி இருக்கிறார். அதிர்ச்சியடைந்த இரக்கம், தீயுடன் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

டிக் டாக்கால் சீரழிந்த குடும்பம்..! மனைவியின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொன்ற கொடூர கணவன்..!

man burnt his wife alive

அப்போது அவர் மேல் இருந்த தீ பரவி, குடிசை ஒன்றும் எரிய தொடங்கியது. தீயுடன் இரக்கம் ஓடி வருவதை பார்த்து செய்வதறியாது திகைத்த அக்கம்பக்கத்தினர், அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின் இரக்கத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிகிச்சையில் இருந்து இரக்கத்திடம் வாக்குமூலம் பெற்றனர். அதில் தனது நடத்தையில் சந்தேகமடைந்து கணவர் தீ வைத்து கொல்ல முயற்சித்ததாக அவர் கூறினார். இதையடுத்து புஷ்பதாசை காவலர்கள் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதியபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios