Asianet News TamilAsianet News Tamil

மதுரையில் பிரபல ரவுடி ஓட, ஓட விரட்டி படுகொலை...!

மதுரையில் ரவுடி ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

madurai rowdy murder
Author
Tamil Nadu, First Published Mar 6, 2019, 3:03 PM IST

மதுரையில் ரவுடி ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் டேங்குமார் என்ற குமரன் (வயது 28), பிரபல ரவுடி. இவர் நேற்றிரவு ஊமச்சிக்குளத்தில் உள்ள ஆலத்தூர் ரோட்டில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் மற்றொரு காரில் வந்து அவரை வழிமறித்து நிறுத்தியது. பின்னர் காரில் இருந்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அந்த கும்பல் இறங்கியது. madurai rowdy murder

இதனை கண்ட குமரன் அதிர்ச்சியடைந்து காரில் இருந்து இறங்கி தப்பியோட முயன்றார். ஆனால் இந்த கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த குமரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த குமரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். madurai rowdy murder

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமரனை கொலை செய்தது யார், முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios