Asianet News TamilAsianet News Tamil

போலீசையே மிரட்டிய லலித்குமார்!! நிலானி வெளியிட்ட பகீர் ஆடியோ...

சின்னத்திரை நிலானி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு உத்வி இயக்குனரான லலித்குமார் கட்டாயப்படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவர் புகார் அளித்ததை தொடந்து லலித்குமார் னடு ரோட்டில் வைத்து தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு நெருப்பை பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டார். 

நிலானி லலித்குமாருடன் பேசிய தொலைபேசி உரையாடலின் ஆடியோ பதிவு ஒன்று சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த ஆடியோ பதிவில் நிலானியிடம் லலித்குமார் ஒரே ஒருமுறை ஜன்னல் அருகே வந்து நில் உன்னை பார்த்துவிட்டு போய்விடுகிறேன் என தெரிவித்திருக்கிறார். நிலானி முடியாது என மறுக்கவும், நீ என்னை பார்க்க வேண்டாம். கண்ணை மூடிக்கொள் நான் உன்னை பார்த்துவிட்டு போய்விடுகிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார். இல்லை என்றால் நான் வீட்டிற்கு வருவேன் என்றும் கூறி இருக்கிறார்.

அதற்கு நிலானி லலித்குமார் வீட்டுக்கு வந்தால் காலிங் பெல்லை அடித்தால், ஒவ்வொரு முறை காலிங் பெல் அடிக்கும் போதும் கையை பிளேடால் வெட்டிக்கொள்வேன். நீ தான் பிளேட் வாங்கி கொடுத்திருக்கியே  என கூறுவது போல அந்த ஆடியோ இருக்கிறது. அது மட்டுமல்லாமல் நிலானி தன்னுடைய கையை ஆழமாக வெட்டி கொண்டது போன்ற புகைப்படங்களும் கிடைத்திருக்கிறது. இந்த ஆதாரங்கள் நிலானி இந்த வழக்கில் இருந்து விடுபட உதவுமா? என்பது வழக்கு விசாரணையின் போது தான் தெரியவரும்.
 

Video Top Stories