Asianet News TamilAsianet News Tamil

6 மாதமாக செக்ஸ் டார்ச்சர் செய்த கிறிஸ்தவ பாதிரியார்... அதிரவைக்கும் க்ரைம்!!

கேரளாவில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிறிஸ்தவ பாதிரியார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
 

Kerala Christian priest held for allegedly sexually abusing boys for over six months
Author
Kerala, First Published Jul 7, 2019, 5:02 PM IST

கேரளாவில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிறிஸ்தவ பாதிரியார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள சிறுவர்கள் விடுதியில் இயக்குநராக பணியாற்றிய பாதிரியார் ஜார்ஜ் டி.ஜே, என்ற ஜெர்ரி, இவர் சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த 6 மாத காலமாக இந்த துஷ்பிரயோகம் நடந்துள்ளது. 

இதுதொடர்பாக சிறுவர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொண்ட போது இத்தகவல் வெளியே தெரியவந்துள்ளது. சிறுவர்கள் விடுதியில் இருந்து விளையாடுவதற்காக வெளியே சென்றுள்ளனர்.  அங்கு மாலை 6 மணிக்கு மேல் விடுதிக்குள் நுழைவதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அப்போது மாணவர்கள் பேசிய போது பாதிரியாரால் நடந்த கொடூரம் வெளியே தெரியவந்துள்ளது. மேலும் இவர், இரவு நேரங்களில் விபச்சார அழகிகளை விடுதிக்கு அழைத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து பெற்றோர்களிடம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் அளித்த புகாரின்படி வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த காம லீலையில் ஈடுபட்ட பாதிரியார் ஜெர்ரியை கைது செய்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios