கருவை கலைத்துவிடு இல்ல 5 லட்சம் பணம் கொடு! மனைவியை துன்புருத்திய சிறை வார்டன்...
கோவை மத்திய சிறை வார்டன் பூபதி என்பவர் வரதட்சணை கேட்டும், கருவினை கலைக்க கோரியும் அடித்து துன்புறுத்துவதாகவும், நடவடிக்கை எடுக்க கோரி, அவரது மனைவி குடும்பத்தினர் பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
கோவை மத்திய சிறையில் பூபதி என்பவர் வார்டனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவியும், பத்து வயதில் ஜாக்லின் ரிஷியா என்ற மகளும் உள்ளனர். திருமணம் நடந்ததில் இருந்து பூபதி வரதட்சணை கேட்டு, மனைவியை கொடுமை படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுதா இரண்டாவது முறையாக கருவுற்றுள்ளார். இதையடுத்து கருவினை கலைக்க வேண்டும், அல்லது 5 இலட்ச ரூபாய் பணம் தர வேண்டுமென கூறி அடித்து துன்புறுத்தியதாக, சுதாவின் குடும்பத்தினர் பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். தொடர்ச்சியாக வரதட்சணை கேட்டு பூபதியும், அவரது தாயார் குப்பாயியும் கொடுமைபடுத்துவதாகவும், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக பேசிய சுதாவின் உறவினர், பூபதி தாக்கியதில் அவரது மனைவி சுதா கடுமையாக பாதிக்கப்பட்டு காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர். மேலும் வரதட்சணை கேட்டு பூபதியும், அவரது தாயார் குப்பாயியும் கொடுமைபடுத்துவதாகவும், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் சுதாவின் உறவினர்கள் வலியுறுத்தினர்.