Asianet News TamilAsianet News Tamil

மாணவியை கண்டஇடத்தில் கைவைத்து செக்ஸ் சில்மிஷம்... கட்டிப்பிடித்து பலாத்கார முயற்சி!! ஐஓபி மேனேஜர் லீலை

டியூசன் படிக்க வந்த பத்தாம் வகுப்பு மாணவியை, கண்டா இடத்தில் கைவைத்தும், கட்டிப்பிடித்தும் செக்ஸ் சில்மிஷம் செய்த  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

IOB Manager harassment for school girl
Author
Chennai, First Published May 21, 2019, 10:47 AM IST

டியூசன் படிக்க வந்த பத்தாம் வகுப்பு மாணவியை, கண்டா இடத்தில் கைவைத்தும், கட்டிப்பிடித்தும் செக்ஸ் சில்மிஷம் செய்த  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் 7வது வடக்கு விஸ்தரிப்பு தெருவினை சேர்ந்தவர் சுமேஷ் குமார். இவரது மகளான 16 வயது சரளா தேவி எதிர் வீட்டில் வசிக்கும் ரவிச்சந்திரனிடம் டியூசன் படித்து வந்திருக்கின்றார். மானகிரி ஐ.ஓ.பி. பேங்க் கிளையின் மேனேஜராகப் பணியாற்றும் ரமணன் இவருக்கு கல்யாணமாகி மனைவியும்  இரண்டு மகன்களும் சென்னை பூந்தமல்லியில் வசித்து வருகின்றனர். 

காரைக்குடியில் தனியாக வசித்து வந்த இவர் தன்னிடம் டியூசன் படிக்க சரளா தேவியின் பின்புறமாக இறுக்கி அணைத்து பாலியல் சேட்டைகளில் ஈடுபட, அப்பெண்ணும் போராடி தன்னை விடுவித்துக் கொண்டு அழுதுகொண்டே ஓடி தன்னுடைய பெற்றோர்களிடம் சொல்லவே, நேராக சென்று ராமணனை குத்து குத்துன்னு குத்திவிட்டு, காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இரு தரப்பினையும் விசாரித்ததின் பேரில், ஐ.ஓ.பி.மேலாளர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரிமாண்டிற்கு அனுப்பினர் போலீசார். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios