மாணவர்கள் இல்லாத நேரம்… வகுப்பறைக்குள் செக்ஸில் ஈடுபட்ட ஆசிரியர்- ஆசிரியை.. வைரலாகும் வீடியோ !!
உத்தமபாளையம் பகுதியில், வகுப்பறையில் ஆசிரியை ஒருவருடன் ஆசிரியர் உடலுறவு கொள்ளும் காட்சிகள் தேனி மாவட்டம் முழுவதும் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். அந்த ஊருக்கு அருகே உள்ள ராமசாமி நாயக்கன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியை ஒருவர் பணிபுரிகிறார்.
இவர்கள் இருவருக்கும் சில மாதங்களாக கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த பிரச்சனை குறித்து அறிந்த ராயப்பன்பட்டி பள்ளி நிர்வாகம் சில நாட்களுக்கு முன் அந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தது.
இதனிடையே ராமசாமி நாயக்கன்பட்டி சென்ற ஆசிரியர், பள்ளி மாணவர்கள் யாரும் இல்லாத நேரத்தில் வகுப்பறையில் பள்ளி ஆசிரியையுடன் செக்ஸில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததை செல்பியும், வீடியோவாகவும் எடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த காட்சிகளை தனக்கு மிக நெருங்கிய ஆசிரியர்களுக்கு வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார்.
இந்த நெருக்கமான வீடியோ தற்போது உத்தமபாளையம் மற்றும் தேனி பகுதிகளில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் வைரலாகி வருகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அறிந்த தேனி மாவட்ட கல்வி அதிகாரிகள் , இந்த வீடியோ உண்மையானதா அல்லது போலியானதா என கண்டறியப்பட்டு உண்மையானது என்றால் தொடர்புடைய ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.