கால்டாக்ஸிக்குள் பதுங்கி இருந்த 3 பேர்... உள்ளே ஏறிய 23 வயது வெளிநாட்டு பெண்...!! நிர்வாணமாக்கி மாறிமாறி அனுபவித்த காமவெறி...!!
அதில் ஏற்கனவே இருந்த 3 வாலிபர்கள் தம்மை நிர்வாணப்படுத்தி தம்மை வன்புணர்வு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்
25 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு பெண்ணின் ஆடைகளை கலைந்து அவரை நிர்வாணமாக்கி காரிலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ள சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . ஹைதராபாத் பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , வெளிநாட்டுப் பெண்ணை தங்களது காமவெறிக்கு மூன்று பேர் கொண்ட கும்பல் இறையாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கடந்த ஜனவரி 16ஆம் தேதி அதிகாலை பெங்களூர் டோட்டபுல்லாரபுர சாலையில் கார் ஒன்று வேகமாக வந்தது திடீரென ஓரங்கட்டப்பட்ட அந்த காரிலிருந்து நிர்வாணமான நிலையில் பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டார் .
பின்னர் அந்த கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டது சாலையில் விழுந்த அந்த பெண் உடலில் ஏகப்பட்ட காயங்கள் இருந்தது . தட்டுத்தடுமாறி எழுந்து அந்த பெண் அருகிலிருந்த அருகில் இருந்த பண்ணை வீட்டிற்கு நடந்து சென்று தனக்கு நேர்ந்த வற்றைக் கூறினார் , பின்னர் அங்கிருந்தவர்கள் கொடுத்த ஆடையை உடுத்திக் கொண்ட அவர், அங்கிருந்து காவல் நிலையம் சென்று தனக்கு நேர்ந்தவைகளைக் கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் . புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பெண்ணிடத்தில் விசாரித்தனர் அதில் , அவர் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர் என்றும் சிறுநீரக கல் சிகிச்சைக்காக டெல்லி வந்ததாகவும் , பின்னர் அங்கிருந்து பெங்களூரு வந்த தனக்கு இப்படி ஒரு சம்பவம் நேர்ந்துவிட்டது என்றும் அந்தப்பெண் தெரிவித்திருக்கிறார்.
பெங்களூரு வந்தபோது ஒரு டாக்ஸி புக் செய்து அதில் ஏறியபோது, அதில் ஏற்கனவே இருந்த 3 வாலிபர்கள் தம்மை நிர்வாணப்படுத்தி தம்மை வன்புணர்வு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார் . அத்துடன் அந்த மூன்று வாலிபர்களும் தன்னிடமிருந்த செல்போன், நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு நிர்வாணமாக்கி சாலையில் தூக்கி எறிந்ததாகவும் அந்தப்பெண் தெரிவித்துள்ளார் . இதில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த பெண்ணை நிர்வாணமாக விடவேண்டிய நோக்கம் என்ன, ஏன் அந்தப் பெண் மூன்று பேர் இருக்கும் டாக்ஸியில் ஏறினார் என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர் .