Asianet News TamilAsianet News Tamil

61 வயது கிழவனுடன் கள்ளக்காதல்.. உல்லாசம்.. மாமியாரை தட்டிக்கேட்ட மருமகன் கொடூர கொலை..!

பொள்ளாச்சி அருகே மாமியாரின் கள்ளக்காதலை  தட்டிக்கேட்ட மருமகன் கொடூரமாக குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

illegal love...Nephew murder
Author
Coimbatore, First Published Feb 19, 2021, 3:56 PM IST

பொள்ளாச்சி அருகே மாமியாரின் கள்ளக்காதலை  தட்டிக்கேட்ட மருமகன் கொடூரமாக குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிப்பாளையத்தை அடுத்த மாப்பிள்ளை கவுண்டர்புதூரைச் சேர்ந்தவர் தண்டபாணி (61). கூலித்தொழிலாளி இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். பின்னர், தண்டபாணிக்கு அந்த பகுதியை சேர்ந்த ராணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

illegal love...Nephew murder

ராணிக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. தண்டபாணி அடிக்கடி ராணி வீட்டுக்கு வந்து செல்வது அவரது மகள்களுக்கு பிடிக்கவில்லை. தங்கள் தாயாருடனான கள்ளக்காதலை கைவிடும் படி தண்டபாணியை அவர்கள் கண்டித்துள்ளனர். ஆனால், தண்டபாணி கேட்கவில்லை. 
இதனிடையே, ராணியின் மகள்களில் ஒருவரான மலர்க்கொடி (29) என்பவர் தனது கணவருடன் பொள்ளாச்சி கோலார்பட்டியில் வசித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு மலர்க்கொடியும், துரையனும் தாய் ராணி வீட்டுக்கு வந்து தங்கியிருந்தனர். 

illegal love...Nephew murder

நேற்று ராணியை தேடி அவரது கள்ளக்காதலனான தண்டபாணி வந்தார். அவரை பார்த்ததும் மலர்க்கொடியும், துரையனும் ஆத்திரமடைந்து அவரிடம் தகரறில் ஈடுபட்டனர். அப்போது, கள்ளக்காதலை கைவிடும்படி கூறியதால் கோபத்தில் கத்தியை எடுத்து அவர் துரையனை குத்தினார். அதை தடுக்க வந்த மலர்க்கொடிக்கும் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த இருவரும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி துரையன் உயிரிழந்தார். படுகாயமடைந்த  மலர்க்கொடிக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார்  தண்டபாணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios