Asianet News TamilAsianet News Tamil

அண்ணியுடன் கட்டிலில் வெறி தீர கொழுந்தன் உல்லாசம்... நேரில் பார்த்த சிறுவர்களுக்கு நேர்ந்த கொடூரம்..!

அண்ணி உஷாராணியின் தங்கை மகாலட்சுமி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். இதில் அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து,  எனது அண்ணன் கோவைக்கு வந்து எங்களை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அண்ணன் எங்களை கண்டித்தார். மேலும் மகாலட்சுமியை அவரே 2-வது திருமணம் செய்து கொண்டார். 

illegal love...2 children killed
Author
Thoothukudi, First Published Mar 25, 2020, 12:30 PM IST

அண்ணியுடன் தனிமையில் உல்லாசமாக இருந்ததை பார்த்த 2 சிறுவர்களை கிணற்றில் தள்ளி கொடூரமாக கொலை செய்த சித்தப்பாவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையா புரத்தைச் சேர்ந்தவர் ஜோதிமுத்து. லாரி ஓட்டுநரான இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி உஷாராணி. இவருக்கு சீமான் அல்போன்ஸ் மைக்கிள் (14) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். 2-வது மனைவி மகாலட்சுமி, உஷா ராணியின் தங்கை ஆவார். இவரது மகன் எட்வின் ஜோசப் ( 9). 

illegal love...2 children killed

ஜோதிமுத்துவின் தம்பி ரத்தினராஜ் (37). லாரி ஓட்டுநரான இவர் நேற்று முன்தினம் சிறுவர்கள் 2 பேரையும்  கிணற்றில் குளிப்பதற்காக அழைத்து சென்றார். அதன் பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் சம்பவ  இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது கிணற்றின் அருகே சிறுவர்களின் செருப்பு, சட்டைகள் இருந்தன. உடனே இது தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் விரைந்த தீயணைப்பு வீரர் 2 சிறுவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, ரத்தினராஜ் போலீசில்  சரணடைந்தார்.

illegal love...2 children killed

இதுதொடர்பாக  அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதில், எனது அண்ணி உஷாராணியின் தங்கை மகாலட்சுமி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். இதில் அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து,  எனது அண்ணன் கோவைக்கு வந்து எங்களை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அண்ணன் எங்களை கண்டித்தார். மேலும் மகாலட்சுமியை அவரே 2-வது திருமணம் செய்து கொண்டார். எனக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார். திருமணமான பின்னரும், நானும் மகாலட்சுமியும் பழகி வந்தோம். வீட்டில் யாரும் இல்லாதபோது நாங்கள் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தோம்.

illegal love...2 children killed

தற்போது பள்ளி விடுமுறை விட்டதால் பிள்ளைகள் வீட்டில் இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நானும் மகாலட்சுமியும் தனிமையில்  உல்லாசமாக இருப்பதை பார்த்த  சீமான் அல்போன்ஸ் மைக்கிள் பார்த்து என்னுடைய குடும்பத்தாரிடம் சொல்லி விட்டான். இதனால், மகாலட்சுமி என்னிடம் பேசுவதை நிறுத்தினார். இதற்கிடையே எனது மனைவி என்னை பிரிந்து சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான்  சீமான் அல்போன்ஸ் மைக்கிள், எட்வின் ஜோசப் தண்ணீரில் தள்ளி கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios