திருப்பத்தூர் அருகே கள்ளக்காதல் மோதிலில் இளம்பெண் வீட்டிற்கு சென்ற வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பூ வியாபாரி கைதானார்.
திருப்பத்தூர் அருகே உள்ள கவுண்டப்பனூர் செவத்தாதான் வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் . இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ரமேஷ் துபாயில் கம்பி கட்டும் வேலை செய்து வந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார். இங்கு வந்த ரமேஷ் அதே பகுதியில் உள்ள அவரது உறவினர் பெண் ஒருவர் வீட்டிற்கு அடிக்கடி சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இதனிடையே கவுண்டப்பனூர் தலைவர் வட்டத்தை சேர்ந்தவர் பூக்கார கிருஷ்ணன். இவர் பூ வியாபாரி. இவரும் அதே பெண் வீட்டுக்கு அடிக்கடி சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார்.. இது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று இரவு ரமேஷ் இளம்பெண் வீட்டில் இருந்தார். அந்த நேரத்தில் பூக்கார கிருஷ்ணனனும் அங்கு வந்தார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பூக்கார கிருஷ்ணன் கத்தியால் ரமேசை வெட்டினார். அவரது கை, கால், கழுத்தின் பின்பகுதி ஆகியவற்றில் பலத்த வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த கந்திலி போலீசார் ரமேஷ் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பூக்கார கிருஷ்ணனை கைது செய்தனர். சம்பவம் நடந்த வீட்டின் உரிமையாளர் இளம்பெண் அவரது கணவருடன் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Oct 11, 2019, 8:11 PM IST