Asianet News TamilAsianet News Tamil

மதுரையில் மயக்க மருந்து தடவி பெண் போலீசை கற்பழித்த சாமியார் ! கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி ஏமாற்றிய கொடூரம் !!

பிரிந்து சென்ற கணவனுடன் சேர்த்து வைப்பதாக கூறி பெண் போலீஸ் ஒருவரை ஏமாற்றி கடத்திச் சென்ற சாமியார் ஒருவர், அந்தப் பெண் மீது மயக்க மருந்து தடவி காருக்குள் வைத்து கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சாமியார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

goddman rape  a lady cop
Author
Madurai, First Published Jul 7, 2019, 9:08 AM IST

மதுரையை சேர்ந்த 29 வயதான பெண் போலீஸ் ஏட்டு ஒருவர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் எனக்கு கடந்த 2007–ம் ஆண்டு திருமணம் நடந்து ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில் எனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எனது கணவர் விவாகரத்து கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் எனக்கு நன்கு அறிமுகமான பூமிநாதன், தல்லாகுளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் என்னை கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறினார்கள். 

goddman rape  a lady cop

இதற்காக அவர்கள் ரூ.1½ லட்சம் வரை கேட்டனர். அந்த பணத்தை சிறிது, சிறிதாக நானும் கொடுத்தேன். இந்த நிலையில் என்னை மதுரை காந்திமியூசியம் அருகே உள்ள ஒரு ஒட்டலுக்கு வரச்சொன்னார்கள்.

நான் அங்கு சென்ற போது என் கணவரை ஒரு சாமியாரை வரவழைத்து கேரளா சென்று வசியம் செய்து சேர்த்து வைப்பதாக கூறினார்கள். அதற்காக எனது கணவரின் சட்டை மற்றும் அவரது காலடி மண் மற்றும் 50 ஆயிரம் ரூபாயுடன் வருமாறு தெரிவித்தனர். நானும் அவர்கள் கூறியபடி பணத்தை ஏற்பாடு செய்து, அதே இடத்திற்கு சென்றேன். அங்கு பூமிநாதன், ஆறுமுகம் மற்றும் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சாமியார் ஜோதி ஆகியோர் காரில் இருந்தனர்.

goddman rape  a lady cop

பின்னர் அவர்கள் வசியம் செய்வதற்கு தேவையான பூஜை பொருட்களை வாங்க வேண்டும் என்று என்னை காரில் அழைத்துக் கொண்டு கீழமாசி வீதிக்கு சென்றோம். அங்கு பூஜை பொருட்கள் வாங்கி கொண்டிருந்த போது சாமியாருக்கு அருள்வந்து, கேரளாவிற்கு செல்ல வேண்டாம் என்று கூறினார். 

எனவே காரில் மீண்டும் காந்தி மியூசியம் பகுதிக்கு வந்தோம். அப்போது சாமியார் தடங்கலாக உள்ளது என்று கூறி எனது உடலில் ஒருவகையான மை போன்ற ஒரு பொருளை தடவினார். அதன் பின்னர் எனக்கு மயக்கம் வந்தது.

goddman rape  a lady cop

அதன்பின்னர் சில மணி நேரம் கழித்து எனக்கு சுயநினைவு வந்த போது எனது ஆடை கலைந்த நிலையில், நான் கற்பழிக்கப்பட்டதை  உணர்ந்து அதிர்ச்சி அடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர் மருத்துவ பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சாமியார் உட்படி 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios