Asianet News TamilAsianet News Tamil

குடி போதையில் தீக்குளித்த காதலன்... காதலியும் தூக்குப்போட்டு தற்கொலை!! ஒரே ஊரில் நடந்த பெரும் சோகம்

குடிப்பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்த வாலிபர் தீக்குளித்து இறந்தார். காதலன் இறந்த துக்கம் தாங்காமல் காதலியும் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

girlfriend suicide for boy friend dead
Author
Chennai, First Published Jun 3, 2019, 11:53 AM IST

குடிப்பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்த வாலிபர் தீக்குளித்து இறந்தார். காதலன் இறந்த துக்கம் தாங்காமல் காதலியும் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூர் பொன்னி அம்மன் நகர், 7-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். ஏ.சி. மெக்கானிக். இவரும், கோவிலம்பாக்கம் சத்யா நகர் 6-வது தெருவை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

மணிகண்டன் தினமும் இரவில் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால், அவரை பெற்றோர் திட்டியதாக தெரிகிறது. ஆனாலும் அடங்காத மணிகண்டன் தினமும் குடித்துவிட்டு வந்து அப்பா அம்மாவோடு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், அவரை கண்டித்த அவரது பெற்றோர், வீட்டுக்குள் அனுமதிக்காமல் வெளியே நிறுத்தி கதவை பூட்டி விட்டதால் மணிகண்டன் வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கினார். அதன்பிறகு அவரது பெற்றோர், நள்ளிரவில் ஏன் இப்படி குடித்துவிட்டு வருகிறாய்?. குடிப்பழக்கத்தை விட்டு விடு என மகனுக்கு அட்வைஸ் செய்திருக்கின்றனர். இதனால் கடும் கோபம் அடைந்த மணிகண்டன், பாட்டிலில் வைத்து இருந்த மண்எண்ணெயை தனது தலையில் ஊற்றி, அவரது பெற்றோர் கண் எதிரேயே தீக்குளித்தார்.

இதனால், அதிர்ச்சி அலறிய பெற்றோர் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மணிகண்டன் உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மருத்துவமனையில் இருந்த காதலனை தினமும் மருத்துவமனைக்கு சென்று பார்த்து வந்துள்ளார் திவ்யா. நேற்று காதலன் உயிரிழந்த தகவல் அறிந்த திவ்யா, தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் தீக்குளித்து இறந்த துக்கம் தாங்காமல் காதலியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Follow Us:
Download App:
  • android
  • ios