மது கொடுத்து இளம் பெண்ணை கற்பழித்த இளைஞர்கள்… மேலும் பல பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தது அம்பலம் !!
சேலத்தில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் செல்போன்களில், ஆபாச வீடியோக்கள் இருப்பதால், மேலும் பல பெண்கள் இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்தவர் மல்லிகா. இவர் கடந்த மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது தாத்தாவை உடன் இருந்து கவனித்து வந்தார்.
அப்போது மருத்துவமனைக்கு வந்த சேலம் அழகாபுரத்தை சேர்ந்த நைம் மாலிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு மாதமாக இருவரும் போனில் பேசி வந்த நிலையில், சாந்தியை திருமணம் செய்து கொள்வதாக நைம் மாலிக் தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய மல்லிகா கடந்த வாரம் சேலம் வந்த அவர் ஏற்காடு, குரும்பப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நைம் மாலிக்குடன் சென்று வந்துள்ளார். அன்று மாலை, சாந்திக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்த நைம் மாலிக், அவரை அரிசிப்பாளையத்தில் உள்ள லாட்ஜிக்கு அழைத்து சென்றார்.
அங்கு நைம் மாலிக் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் என 3 பேரும் சேர்ந்து மல்லிகாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து வெளியே தெரிவித்தால் கொன்று விடுவதாக மிரட்டிய அவர்கள், சாந்தியின் ஏடிஎம் கார்டில் இருந்து 17 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர்.
இதுகுறித்து மல்லிகா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த டவுன் மகளிர் போலீசார், நைம் மாலிக் , அவரது நண்பர்களான நபீஸ் , ரஞ்சித் ஆகியோரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட அந்த 3 இளைஞர்களின் செல்போன்களில் பாலியல் பலாத்காரம், பெண்களிடம் உல்லாசம் அனுபவிப்பது என ஏராளமான ஆபாச வீடியோக்கள் உள்ளன. எனவே, இவர்கள் மூவரும் சேர்ந்து பல பெண்களை பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக எடுத்துள்ளனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.