Asianet News TamilAsianet News Tamil

கல்லூரி மாணவியை காருக்குள் வைத்து மாறி மாறி கற்பழித்த 5 மாணவர்கள்... கர்நாடகாவில் வைரலாகும் வீடியோ!!

கல்லூரி மாணவியை காருக்குள் வைத்து 5 மாணவர்கள் சேர்ந்து மாறி மாறி கற்பழித்த சம்பவம்  தொடர்பாக அந்த மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Gang rape of girl student Police arrest five boys
Author
Bangalore, First Published Jul 4, 2019, 5:56 PM IST

கல்லூரி மாணவியை காருக்குள் வைத்து 5 மாணவர்கள் சேர்ந்து மாறி மாறி கற்பழித்த சம்பவம்  தொடர்பாக அந்த மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில வாட்ஸ் அப் குழுவில் இளம் பெண்ணை இளைஞர்கள் மாறி மாறி கற்பழிக்கும் வீடியோ ஒன்று பரவியது. அதாவது சொகுசு காரில் அரை நிர்வாணத்தில் இருக்கும் அந்த பெண்ணிடம் 5 வாலிபர்கள்  போதையில் இருக்கும் பெண்ணை மாறி  மாறி பாலியல் வன்கொடுமை செய்ததும், அதை வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த ஆபாச வீடியோவானது, மாநிலம் முழுவதும்  பரவியது.

இந்த வீடியோவில் இருக்கும் கன்னடத்தில் திட்டுவதும் பதிவாகியிருந்தது. போதையில் கற்பழிக்கப்பட்ட அந்த பெண் யார்? இப்படி மாறி மாறி உள்ளச்சம் அனுபவித்த அந்த 5 வாலிபர்கள் யார்? என தெரியாமல் இருந்தது. இந்நிலையில், வைரலாக பரவிய வீடியோவால்  இந்த இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநிலம் போலீஸ் அதிகாரிகள் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். மங்களூர் அருகே உள்ள தச்சினகன்னடா போலீஸ் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்தது.

போலீசார் நடத்திய  விசாரணையில் 5 கல்லூரி மாணவர்கள் சேர்ந்து மாணவியை கற்பழித்து இருப்பது தெரிய வந்தது. மேலும், அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவரான சுனில் என்பவரின் அழைப்பை ஏற்று மாணவி காரில் சென்றதும் அங்கு, தனது நண்பர்களால் மாணவி சீரழிக்கப் பட்டது தெரியவந்தது.

சுனில் அந்த மாணவியுடன் காரில் சந்தோஷமாக இருந்தபோது அவரது நண்பர்கள் 4 பேரும் வந்து காரில் ஏறியுள்ளனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து மாணவியை கற்பழித்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல்  வாட்ஸ் அப்பில் பரப்பியதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சுனில், கிஷாந்த், பிரக்கியா, பிஜ்வால், குருநாதன்,  ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டனர்.

பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அதுதொடர்பான சட்டப்பிரிவு உள்பட கடுமையான 4 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கற்பழிப்பு வழக்கும் பாய்ந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios