Asianet News TamilAsianet News Tamil

மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நண்பன் - இரவோடு இரவாக தீர்த்து கட்டிய ‘சம்பவம்’ - நாமக்கல் அருகே பரபரப்பு

 

மனைவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த நண்பனை, அடித்து கொலை செய்த கணவன். இச்சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

Friend who sexually harassed his wife and friend kill at namakkal
Author
Komarapalayam, First Published Nov 17, 2021, 11:09 AM IST

 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவரும் ,வெங்கடேசனும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.வாரத்தின் 6 நாட்கள் வேலை செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை ஊர் திரும்புவது வழக்கம். கடந்த சனிக்கிழமை அன்று ஊருக்கு வந்த அரவிந்த், ஞாயிற்றுக்கிழமை திருமணத்திற்கு செல்வதாக கூறி சென்றார். பிறகு அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கடைசியாக அரவிந்த் வெங்கடேஷ் வீட்டுக்கு சென்றதாகவும், அதன் பிறகு தான் காணவில்லை என்றும்  குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். 

Friend who sexually harassed his wife and friend kill at namakkal

அரவிந்த்தின் நண்பரான வெங்கடேசிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்  போலீசார். இதுகுறித்து பேசிய போலீசார், ‘அரவிந்த் சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் மனைவிக்கு போன் செய்து ஆபாச வார்த்தையில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், அரவிந்தை கொலை செய்ய திட்டமிட்டு இரண்டு கோணிப் பைகளை வாங்கியுள்ளார்.கடந்த 14ம் தேதி  அரவிந்தை தன் வீட்டுக்கு வரசொல்லியுள்ளார் 

Friend who sexually harassed his wife and friend kill at namakkal

வெங்கடேஷ். வீட்டிலிருந்தவர்களை விசேஷத்திற்கு அனுப்பி விட்டார். வீட்டுக்கு வந்த அரவிந்திடம் வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் தண்ணீர் தொட்டியில் அழுத்தி அரவிந்தை கொலை செய்துள்ளார். அதன் பின் வெங்கடேஷின் தம்பி கிருஷ்ணராஜ் கோணிப்பையில் அரவிந்தின் சடலத்தை போட்டு மூட்டை கட்டி வீட்டினுள் வைத்து விட்டனர். அன்று இரவு பழைய காவிரி பாலத்தில் சடலத்தை போட்டுள்ளனர். அரவிந்த் உடைய சடலம் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை.தொடர்ந்து தேடி வருகிறோம்’ என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 




 

Follow Us:
Download App:
  • android
  • ios