Asianet News TamilAsianet News Tamil

நேரம் காலம் இல்லாமல் எப்ப பார்த்தாலும் செக்ஸ் டார்ச்சர்... புருஷனை சோத்துல விஷம் வைத்து கொன்ற 20 வயதுபெண்..!

கல்யாணம் ஆன ஏழு மாதத்தில் அடிக்கடி பாலியல் உறவு வைத்து டார்ச்சர் செய்த கணவனை உணவில் விஷம் வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

erode husband murder... Pregnant woman arrested
Author
Erode, First Published Feb 21, 2021, 4:05 PM IST

கல்யாணம் ஆன ஏழு மாதத்தில் அடிக்கடி பாலியல் உறவு வைத்து டார்ச்சர் செய்த கணவனை உணவில் விஷம் வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி மைக்கேல்பாளையம் ரோட்டில் உள்ள காளியண்ணன் தோட்டத்தில் வசித்து வந்தவர் நந்தகுமார் (35). விவசாயியான இவருக்கு 3 ஏக்கர் விளைநிலம் உள்ளது. தாயாருடன் தங்கியிருந்த நந்தகுமார் தனியார் மாவு மில்லுக்கும் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன் பவானி பெரிய மோளப்பாளையத்தை சேர்ந்த மைதிலி (20) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.. மைதிலிக்கு அவரது 15 வயதிலேயே முதல் திருமணம் நடைபெற்று ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தவர். சமீபத்தில் நந்தகுமாருடன் 2வது திருமணம் செய்து வைத்தனர்.

erode husband murder... Pregnant woman arrested

கடந்த ஜனவரி 31ம் தேதி திடீரென வயிற்றுப்போக்குடன், வாந்தியால் நந்தகுமார் உடல்நிலை பாதிக்கப்பட்டார். இதையடுத்து அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது ரத்தத்தில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது. மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  மாஜிஸ்திரேட் வரவழைக்கப்பட்டு நந்தகுமாரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் கடந்த மாதம் 28ம் தேதி தனது தோட்டத்தில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்தடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து சாப்பிடுகையில் உணவு கசப்பது போலிருந்தது.

erode husband murder... Pregnant woman arrested

அதன் பின்தான் இதுபோன்ற நிலை ஏற்பட்டதாகவும், மனைவியின் மீதும் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர், கடந்த 15ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நந்தகுமாரின் மனைவி மைதிலியிடம் விசாரித்த போது முண்ணுக்கு பின் புரணாக பதிலளித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவரிம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கணவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். திருமணமான முதல் மாதத்தில் பாலியல் உறவு வைத்துக்கொள்வதில் நந்தகுமார் ஆர்வமே இல்லாத நிலையில் இருந்துள்ளார்.

erode husband murder... Pregnant woman arrested

பின்பு தனியார் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் மாத்திரைகளைப் பெற்று சாப்பிட்டு வந்தார். அதன்பிறகு கடந்த சில மாதங்களாகவே மைதிலிக்கு நந்தகுமார் அதிகமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இரவு, பகல் என பாராது அவர் மைதிலியை பலமுறை தொந்தரவு செய்து வந்துள்ளார். கர்ப்பமானது உறுதியான பின்னரும், கர்ப்பிணியென்றும் பாராமலும் தொடர்ந்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் தனது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால்,  கணவருக்கு பூச்சிக்கொல்லி மருந்து கலந்த உணவை கொடுத்து கொலை செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து மைதிலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios