தாயின் கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மகள்! கள்ளக்காதலன் தாக்கியதால் மாணவி தற்கொலை!
தாயின் தவறான போக்கை கண்டித்த மகளை, அவருடைய காதலன் அடித்து துன்புறுத்தியதால், மனம் உடைத்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயின் தவறான போக்கை கண்டித்த மகளை, அவருடைய காதலன் அடித்து துன்புறுத்தியதால், மனம் உடைத்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள நயினார் பாளையத்தை சேர்த்த வெங்கடேசன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
இவருக்கு கவிதா தேவி (41 ) என்கிற மனைவியும், வைதேகி (19 ) 12 ஆம் வகுப்பு , பாக்கியலட்சுமி (16 ) 11 ஆம் வகுப்பு , மற்றும் மகாலக்ஷ்மி (10 ) 5 ஆம் வகுப்பு, என மூன்று மகள்கள் உள்ளனர். மூன்று மகள்களையும் கவிதா தேவி தான் வேலைக்கு சென்று வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கவிதா தேவிக்கும், அதே பகுதியை சேர்ந்த கிராம உதவியாளர் ரமணா என்பவருக்கும் கள்ளத்தொடர்ந்து இருந்துள்ளது. இதை ஒரு நாள் கவிதா தேவியின் இரண்டாவது மகள் பாக்கியலட்சுமி நேரடியாக பார்த்துள்ளார்.
இது தவறு என கூறி தாயிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் பாக்கிய லட்சுமியை கவிதா தேவியின் கள்ளகாதலன் அடித்துள்ளார். இதனால் மனமுடைந்த பாக்கிய லட்சுமி, வீட்டில் இருந்த பூச்சு மருதை எடுத்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து பாக்கிய லட்சுமியின் தாத்தா முனுசாமி.. கீழ் குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் தற்போது வழக்கு பதிவு செய்து போலீசார் கவிதா தேவி, மற்றும் ரமணா ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.