Asianet News TamilAsianet News Tamil

தலித் இளம்பெண்ணை ஒதுக்குபுறமாக தூக்கிச்சென்று கதறவிட்டு கற்பழிப்பு... வெறி தீராததால் கொலை செய்த காமக் கொடூரன்கள்..!

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்த 19 வயது தலித் இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 31-ம் தேதி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், தங்களது மகளை யாரோ கடத்தி சென்றுவிட்டனர் என தெரிவித்தனர். ஆனால், அந்த பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் உள்ளதாகவும், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறிய போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.

Dalit teenager women gang raped murder
Author
Gujarat, First Published Jan 9, 2020, 5:40 PM IST

குஜராத்தில் தலித் பெண்ணை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்த 19 வயது தலித் இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 31-ம் தேதி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், தங்களது மகளை யாரோ கடத்தி சென்றுவிட்டனர் என தெரிவித்தனர். ஆனால், அந்த பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் உள்ளதாகவும், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறிய போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.

Dalit teenager women gang raped murder

இந்நிலையில், அந்த இளம்பெண் அங்குள்ள மரத்தில் தூக்கில் தொடங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பதால் முறையாக போலீசார் விசாரிக்கவில்லை.

Dalit teenager women gang raped murder

இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிமல், தர்‌ஷன், சதீஷ் மற்றும் ஜிகர் ஆகிய 4 பேர் கும்பல், பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios