Asianet News TamilAsianet News Tamil

தினம் படுக்கையறையில் செ**டார்ச்சர்... துணி மாற்றும் போது மறைந்திருந்து வீடியோ... சைகோ கணவனால் கதறிய மனைவி.

மனைவிக்கு தினந்தினம் பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்ததுடன், நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் கணவன் மீது மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Complaint against the husband who sexually tortured his wife and threatened her by making a nude video.
Author
Madhya Pradesh, First Published Jul 4, 2022, 1:49 PM IST

மனைவிக்கு தினந்தினம் பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்ததுடன், நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் கணவன் மீது மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் இந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலிரவு தொடங்கி தற்போது வரை உடல்ரீதியாக கணவன் சித்திரவதை செய்து வந்ததாகவும் அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க அரசும், காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. காதலிப்பதாக கூறி கற்பழித்து ஏமாற்றுவது, காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்து கொண்டு பின்னர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது, ஈவு இரக்கமின்றி மிருகத்தனமாக இயற்கைக்கு முரணான உடலுறவில் ஈடுபடுவது போன்ற  எண்ணற்ற கொடுமைகளைப் பெண்கள் அனுபவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:கல்யாணம் ஆன டீச்சருக்கு இது தேவையா...? இளைஞனை விரட்டி விரட்டி காதலித்து டார்ச்சர்... கடைசியில் நடந்த கொடூரம்.

Complaint against the husband who sexually tortured his wife and threatened her by making a nude video.

இந்த வரிசையில் திருமணம் செய்துகொண்டு கணவனே மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள லசூதியா காவல் நிலைய பகுதிக்குள் ஆடம்பரமான காலனியில் 30 வயது பெண்ணுக்கும், கான்பூரைச் சேர்ந்த ஒரு இளைஞனுடன் 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்பெண்ணின் பெற்றோர்கள் மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தனர். கான்பூரில் உள்ள பண்ணை வீட்டில் திருமணம் நடந்தது. அந்தப் பெண்ணுக்கு 40 சவரன் தங்கம், சொகுசு கார் உள்ளிட்டவை வரதட்சணையாக வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: சார் நான் உங்க ஸ்டுடென்ட் என்ன விட்டுடுங்க.. ஓயாமல் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் நிலைமையை பார்த்தீங்களா?

திருமணத்திற்குப் பின்னர் கணவன் தேனிலவு என்ற பெயரில் கான்பூரில் உள்ள ஹோட்டலுக்கு மனைவியை அழைத்துச் சென்று வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துள்ளார், பின்னர் அவர் தனது உடல் ஆட்சியை தீர்த்துக் கொள்ள மனைவியுடன் ஒரு சாடிஸ்ட் போல நடந்துள்ளார், முதலிரவு தொடங்கியது முதல் இரண்டு ஆண்டுகள் வரை கணவன் தனது வக்கிரமான செயல்களால் மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.

இது நாளடைவில் சரியாகி விடும் என்று மனைவி சகித்துக் கொண்ட நிலையில், மற்றுமொரு வக்கிர செயலை கணவன் காட்டத் தொடங்கினார், மனைவி குளித்துவிட்டு உடை மாற்றும் போது கேமராவைப் பொருத்தி நிர்வாணமாக வீடியோ எடுப்பது, மனைவி குளிக்கும் போது நிர்வாண வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார், இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மனைவி தனது கணவனின் இச் செயலை கடுமையாக கண்டித்தார். ஆனால் கணவனின் குடும்பத்தார் தனது மகனுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

Complaint against the husband who sexually tortured his wife and threatened her by making a nude video.

ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணிடம் இந்த  வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி கணவர், தாய் வீட்டிற்கு சென்று ஒரு கோடி ரூபாய் வாக்கி வரும்படி மிரட்டியுள்ளார். இந்நிலையில் தனது கணவனின் தொல்லையை தாங்க முடியாத அந்த பெண், ஒரு கோடி ரூபாயை சைக்கோ கணவனிடம் வாங்கிக் கொடுப்பதற்கு மாறாக என்ன நடந்தாலும் பரவாயில்லை என காவல் நிலையத்தில் அவர் மீது புகார் கொடுத்தார். இந்த புகாரை கேட்டு போலீசார் பயங்கர அதிர்ச்சி அடைந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை நம்ப மறுத்தனர். பின்னர் அவரது கணவர் அழைத்துவந்து விசாரித்ததில் அந்தப் பெண் தெரிவித்த அத்தனை புகார்களும் உண்மை என்பது உறுதியானது.

பின்னர் அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நிச்சயம் குற்றவாளி கணவனுக்கு தண்டனை பெற்று தரப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். கணவனே மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios