தலைக்கெறிய காமம்... இளம்பெண்ணை தாக்கி புதருக்குள் தூக்கிச் சென்று புரட்டி எடுத்த காமக்கொடூரன்...!
பெண்ணை தூக்கிச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொல்ல முயன்ற கொடூர வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணை தூக்கிச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொல்ல முயன்ற கொடூர வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு லைட் ஹவுஸ் ஊராட்சிக்கு உட்பட்ட வைரவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரின் மகன் பன்னீர்(19). இவர் நேற்று மாலை பழவேற்காடு பகுதியை சேர்ந்த பழங்குடியினர் பெண்ணை சரமாரியாக தாக்கி அங்குள்ள புட்புதருக்குள் தூக்கிச்சென்றுள்ளார்.
பின்னர், அங்கு வைத்து அந்த பெண்ணை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்து முயற்சித்தார். இதனிடையே, பெண்ணின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டுவந்ததால் அந்த பெண்ணை விட்டுவிட்டு அங்கிருந்து பன்னீர் தப்பியோவிட்டார். இதன்பிறகு அலங்கோலமாக நின்ற அந்த பெண்ணை மீட்டு உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தினர். பின்னர், அப்பகுதியில் பதுங்கியிருந்த கொடூரன் பன்னீரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.