Asianet News TamilAsianet News Tamil

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்.. அடித்து கொன்று சடலத்துடன் உடலுறவு.. 19 வயது இளைஞர் அட்டூழியம்.

இந்த  வரிசையில் 60 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்து அந்தப் பெண்ணை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அடுத்த பிலிபங்க நகரைச் சேர்ந்தவர் சுரேந்திர குமார் (வயது 19) இவருக்கு பக்கத்து ஏரியாவான ஹனுமன்கர் பகுதியில் 60 வயது பெண் வீட்டில் தனியாக வசித்து வந்தார்,

An old woman who refused to comply with his desire .. beaten to death and had sex with a corpse .. 19 year old youth atrocity.
Author
Chennai, First Published Sep 18, 2021, 5:27 PM IST

60 வயது பெண்ணை அடைய முயன்ற 19 வயது இளைஞன், அந்தப் பெண் ஒத்துழைக்காததால் அடித்துக் கொன்று பின்னர் அந்தப் பெண் சடலத்துடன் உடலுறவு கொண்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண்களுக்கு எதிரான  வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆறு மாத குழந்தை முதல் 60 வயது கிழவிவரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் கொடூரம் நாட்டில் தொடர்கதையாகி உள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி கற்பழிப்பு , காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீச்சு, வரதட்சணை வாங்கி வரச்சொல்லி மனைவியை அடித்து குடும்ப வன்முறை என பல விதங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அரங்கேறி வருகிறது. 

An old woman who refused to comply with his desire .. beaten to death and had sex with a corpse .. 19 year old youth atrocity.

இந்த  வரிசையில் 60 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்து அந்தப் பெண்ணை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அடுத்த பிலிபங்க நகரைச் சேர்ந்தவர் சுரேந்திர குமார் (வயது 19) இவருக்கு பக்கத்து ஏரியாவான ஹனுமன்கர் பகுதியில் 60 வயது பெண் வீட்டில் தனியாக வசித்து வந்தார், அவரது கணவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். அந்தப் பெண்ணுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை, அந்தப் பெண் தனியாக இருப்பதை நோட்டமிட்டு வந்த சுரேந்திர குமார், அந்தப் பெண்ணை கற்பழிக்க திட்டமிட்டார். அதுக்காக சமயம் பார்த்து காத்திருந்த அவர், கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவில் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். ஆனால் சுதாரித்துக் கொண்ட அந்த பெண் சுரேந்தரை கடுமையாக எச்சரித்தார். அந்தபெண்ணிடம் சூரேந்தர் எவ்வளவோ கெஞ்சினார். அந்தப் பெண் சுரேந்திரன் இச்சைக்கு உடன்பட வில்லை,

An old woman who refused to comply with his desire .. beaten to death and had sex with a corpse .. 19 year old youth atrocity.

எவ்வளவோ முயற்சித்தும் அந்தப்பெண் ஒத்து வராததால், தான் வைத்திருந்த ஆயுதத்தால் சுரேந்திர குமார் அந்த பெண்ணை கடுமையான தாக்கினார் அதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போதும் வெறி தீராத சுரேந்திர குமார் அந்தப் பெண் இறந்து விட்டார் என்று தெரிந்திருந்தும், அந்தப் பெண்ணின் சடலத்துடன் உடலுறவு கொண்டார், தனது காம இச்சையை தீர்த்துக் கொண்ட அவர் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து தப்பினார், பொழுது விடிந்து அந்தப் பெண்ணின் உறவினர் வந்து பார்த்தபோது, அவர் சடலமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து போலீசிக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு  விரைந்துவந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சுரேந்தர் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்ததை பார்த்த சில கிராம மக்கள் போலீசாருக்கு விஷயத்தைக் கூறினார். இதையடுத்து போலீசார் சுரேந்திர குமாரை தேடியதில் அவர் தலைமறைவானார்.

An old woman who refused to comply with his desire .. beaten to death and had sex with a corpse .. 19 year old youth atrocity.

குற்றவாளி அவர்தான் என உறுதி செய்த போலீசார் அவரை  வலைவீசி தேடி வருகின்றனர். தன் தாய் வயதுள்ள ஒரு பெண்ணிடம் தவறாக கலந்துகொள்ள முயற்சித்து பின்னர் அந்தப் பெண்ணை அடித்துக் கொன்று சடலத்துடன் இளைஞர் உடலுறவு கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காம கொடூரனை பிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios