நல்லவனைபோல பேசி இளம் நடிகையை வளைத்த இளைஞன். கோவாவுக்கு கூட்டிச் சென்று அடிக்கடி உல்லாசம்.. கடைசியில் டுவிஸ்ட்
திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் நடந்துள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் நடந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு வகையில் பெண்கள் மோசடி செய்யப்படுகின்றனர், சாதாரண பெண்கள் முதல் படித்து சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தில் இருக்கும் பெண்கள் கூட வக்கிர மனம் படைத்த ஆண்களால் ஏமாற்றப்படுகின்றனர். இந்த வரிசையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் நடிகையுடன் உல்லாசம் அனுபவித்து தொழிலதிபர் மோசடி செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படியுங்கள்: ஃபாரினுக்கு சென்ற கணவர்.. ஏக்கத்தில் பரிதவித்த 39 வயது பெண்.. 25 வயது இளைஞருடன் எஸ்கேப்..!
முழு விவரம் பின்வருமாறு:- மும்பையைச் சேர்ந்தவர் இளம் தொழில் அதிபர், கட்டுமான நிறுவன அதிபர் அஜய் கபூர், இவர் பிரபல நடிகை ஒருவரை மும்பை புறநகர் பாந்திராவில் உள்ள தனது நண்பரின் இல்லத்தில் சந்தித்தார். அந்த நடிகை சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார், இச்சந்திப்பின் போது இருவரும் கைப்பேசி எண்களை பகிர்ந்துகொண்டனர். பின்னர் இருவரும் கைப்பேசியில் குறுஞ்செய்தி பகிர்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தனர்.
இதையும் படியுங்கள்: தலித் சிறுவர்களிடம் தீண்டாமை: கடைகாரர் உள்ளிட்ட இருவர் கைது.. கடைக்கு சீல்
நாளடைவில் அது காதலாக மாறியது, அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து அஜய் கபூர், அவருடன் அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டு வந்தார். கபூர் கபே பரேட் பகுதியிலுள்ள தனது இல்லத்தில் வைத்து பலமுறை அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அதன்பின்னர் கோவாவுக்கு கூட்டிச் சென்று அங்கு உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். தொடர்ந்து அந்த நடிகையை உடலுறவுக்கு வருமாறு அஜய் கபூர் வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் வெறுப்படைந்த அந்த நடிகை திருமணம் செய்துகொண்ட பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத அஜய் கபூர், திருமணம் செய்ய முடியாது என கூறியதுடன் அந்த நடிகையை சரமாரியாக தாக்கியுள்ளார், பிறகு நடிகையின் பெற்றோருக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகளை அனுப்பியதுடன், அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த நடிகை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பாலியல் பலாத்காரம், மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அஜய் கபூரை கைது செய்துள்ளனர் .