Asianet News TamilAsianet News Tamil

விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச பட வேட்டை..! 600 பேருக்கு ஆப்பு ரெடி..!

ஆபாச படம் பார்த்தது பரப்பியதாக 600 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. இந்த 600 பேர் பட்டியலில் சென்னையில் மட்டும் 100 பேர் பெயர் இருக்கிறது. இதையடுத்து பட்டியலில் இருக்கும் அனைவர் மீதும் கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.

600 persons will be arrested for watching porn films
Author
Trichy, First Published Feb 26, 2020, 12:24 PM IST

சமீபத்தில் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு ஆபாச படம் பார்ப்பவர்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டது. அதில் உலகளவில் இந்தியாவில் தான் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் அந்த எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது. அதிலும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி, தமிழகத்தில் சென்னையில் தான் அதிகளவிலானோர் ஆபாச படம் பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

600 persons will be arrested for watching porn films

தமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகள் சம்பந்தமான படங்களை தேடி, தரவிறக்கம் செய்வதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த மத்திய உள்துறை அமைச்சகம், அதை தமிழக காவல்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதனடிப்படையில் தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு காவலர்கள் நடவடிக்கையில் இறங்கினர்.

600 persons will be arrested for watching porn films

சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பரப்பியதாக சென்னை, கோவை, திருச்சி, கரூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஆபாச படம் பார்த்தது பரப்பியதாக 600 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. இந்த 600 பேர் பட்டியலில் சென்னையில் மட்டும் 100 பேர் பெயர் இருக்கிறது. இதையடுத்து பட்டியலில் இருக்கும் அனைவர் மீதும் கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.

600 persons will be arrested for watching porn films

இதன்காரணமாக தற்போது அனைத்து மாவட்ட காவல்துறையினரும் ஆபாச பட பிரச்சனையில் தீவிர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆபாச படம் பார்த்து பரப்பியவர்களின் பெயர்கள் மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது. ஆபாச படம் குறித்த தீவிர நடவடிக்கைகளுக்கு பிறகு செல்போனில் ஆபாச படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை  குறைந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios