Asianet News TamilAsianet News Tamil

4 பேர் என்கவுண்ட்டர் !! பிரியங்கா ரெட்டியை எரித்துக் கொன்ற இடத்திலேயே போட்டுத் தள்ளிய போலீஸ் !! நள்ளிரவு நீதி !!

தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை கற்பழித்து  எரித்துக்கொன்ற 4 பேரும்  என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். டாக்டர் பிரியங்கா ரெட்டியை குற்றவாளிகள் கொன்று எரித்த அந்த பாலத்தின் கீழேயே போலீசார் அவர்களை போட்டுத் தள்ளியது.

4 criminals shot dead in encounter
Author
Telangana, First Published Dec 6, 2019, 8:29 AM IST

கடந்த நவம்பர் 27 ஆம் தேதி  தெலுங்கானாவில் பணி பணி முடிந்து இரவு வீடு திரும்பிய பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி என்பவருக்கு உதவி செய்வது போல் கடத்திச் சென்று லாரி டிரைவர்கள் 4 பேர் பலாத்காரம் செய்தனர். 

அப்பெண்ணின் வாயில் கட்டாயப்படுத்தி விஸ்கியை ஊற்றி, அவரை மயக்கமடையச் செய்து, பலாத்காரம் செய்து, பின் கழுத்தை நெறித்து கொலை செய்து , உடலை எரித்தனர். இந்த கொடூரத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள், கிளீனர்கள் என கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். 

4 criminals shot dead in encounter

இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் வலுத்தது. பார்லிமென்டிலும் இந்த சம்பவம் எதிரொலித்தது. குற்றவாளிகள் 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 criminals shot dead in encounter

இந்த வழக்கில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யும் வகையில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 

 இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக குற்றம் நடந்த இடமான பெங்களூரு – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரியங்கா ரெட்டி எரித்துக் கொல்லப்பட்ட அந்த பாலத்தின் அடியில் அழைத்துச் சென்றனர்.

4 criminals shot dead in encounter

அந்த நான்கு பேரும் எப்படி கொலை செய்தனர் என்பது குறித்து நடித்துக் காட்டச் சொல்லி போலீசார் அவர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அந்த 4 பேரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து,  4 பேரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். 

4 criminals shot dead in encounter

பிரியங்கா ரெட்டி எரித்துக் கொல்லப்பட்ட அதே இடத்தில் குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளிய சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios