Yashika Anand : காலில் பிரச்சினை என்றாலும் கவர்ச்சி காட்டுவேன்...!! தன்னம்பிக்கையோடு எழுந்து நிற்கும் யாஷிகா
சமூக வலைதளங்களில் மீண்டும் ஆக்டிவாகி உள்ள யாஷிகா, நீண்ட நாட்களுக்கு பின் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் நடித்த அவர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டபின் மிகவும் பிரபலமானார்.
இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்தன. இவர் கைவசம் சல்பர், எஸ்.ஜே.சூர்யாவின் கடமையை செய், மகத்தின் இவன் தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீமா உள்பட ஏராளமான படங்கள் உள்ளன.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் யாஷிகா, கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதியதில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த யாஷிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சுமார் 4 மாதமாக படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா, தற்போது தான் எழுந்து நடக்கும் அளவுக்கு குணமாகி உள்ளார்.
விபத்துக்கு பின் சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்த யாஷிகா, தற்போது மீண்டும் ஆக்டிவாகி உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ‘தன் வாழ்க்கையை விட தன் முடி அசிங்கமாக உள்ளதாக’ யாஷிகா குறிப்பிட்டுள்ளார்.
காலில் பிரச்சினை இருந்தாலும் கவர்ச்சி காட்டுவேன் என தன்னம்பிக்கையோடு எழுந்து நிற்கும் யாஷிகாவின் புகைப்படத்தை பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், லைக்குகள் மூலம் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.