ஸ்ரீரெட்டியின் சர்ச்சையில் சிக்கிய மற்றொரு பிரபல நடிகர்..!
தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தும், யாரும் கண்டு கொள்ளாததால் தற்போது, தமிழில் பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றிய தமிழ் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது திரும்பியுள்ளது ஸ்ரீரெட்டின்யின் பார்வை.
இதனால் கோலிவுட் திரையுலகமே பரபரப்பின் உச்சத்தில் உள்ளது. இதுவரை நடிகர் ஸ்ரீகாந்த, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் சுந்தர் .சி, நடிகர் லாரன்ஸ், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலரது மீது பாலியல் குற்றம் சாட்டியுள்ள இவருடைய லிஸ்டில் புதிதாக இணைத்துள்ளார் பிரபல நடிகர் ஆதி.
இது குறித்து ஸ்ரீரெட்டி கூறியுள்ளது..."ஆதி அடிக்கடி ஐதராபாத் வருவார். எனக்கு தமிழில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறுவார். எனக்கு சென்னையில் யாரையும் தெரியாது என்பதால். எனக்கு உதவி செய்வதாக கூறி... பின்னர் செய்யவில்லை" என கூறியுள்ளார்.
ஆதி, 'மிருகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து 'ஈரம்', 'அய்யனார்', 'ஆடுபுலி', 'அரவான்', ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த வருடம் இவருடைய நடிப்பில் வெளியான 'மரகத நாணயம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற போதிலும் தற்போது தெலுங்கு திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.