போட்ட ட்விட்டை பதறியபடி நீக்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த்? பின் கொடுத்த விளக்கம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய வேலைகளில் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய குழந்தை வேத் உடன் நேரம் செலவழிக்க மட்டும் மறப்பதில்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய வேலைகளில் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய குழந்தை வேத் உடன் நேரம் செலவழிக்க மட்டும் மறப்பதில்லை.
அடிக்கடி தன்னுடைய குழந்தை வேத் செய்யும் சிறு சிறு குறும்பு தனங்களையும் புகைப்படம் வழியாகவும், வீடியோ வழியாகவும் வெளியிட்டு தன்னுடைய குடும்ப சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
இந்நிலையில் திடீரென்று, குழந்தைகளுக்கு இளம் வயதில் நீச்சல் பழகி கொள்ள வேண்டும் என்றும், இது மிகவும் முக்கியம் என்றும் அதே நேரத்தில் குழந்தைகளை விட்டு விலகாமல் அருகிலேயே இருந்து அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நீச்சலின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்களுக்கு அறிவுரை கூறிய படி ட்விட் ஒன்றை போட்டார் சௌந்தர்யா.
தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில், தண்ணீர் சேமிப்பது குறித்து பேசாமல், நீச்சல் குளத்தில் குளிப்பது அவசியமா? என நெட்டிசன்கள் சிலர் சௌந்தர்யா ரஜினிகாந்த்துக்கு எதிராக ட்விட்டுகளை அடுக்கடுக்காக போட ஆரம்பித்தனர். இதையடுத்து சௌந்தர்யா பதறியடித்தபடி தான் போட்ட ட்விட்டை நீக்கி விட்டார்.
Removed the pictures shared in good spirit from my #TravelDiaries considering the sensitivity around the current #WaterScarcity we are facing 🙏🏻. The throwback pics were to emphasise the importance for physical activities for children from a young age only 🙂🙏🏻 #LetsSaveWater
— soundarya rajnikanth (@soundaryaarajni) June 30, 2019
மேலும் இதுகுறித்து விளக்கம் கொடுக்கும் வகையில், தற்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் தண்ணீர் பிரச்சனைகளுக்கு இடையே இந்த புகைப்படம் பதிவு செய்தது சரியாக இருக்காது என்பதால் அதனை டெலிட் செய்து விட்டேன். சிறு குழந்தைகள் நீச்சல் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே , அந்த ட்விட்டின் நோக்கமாக இருந்தது. தண்ணீர் சேமிப்பதும் முக்கியம் தான் என கூறியுள்ளார்.