ராசி இல்லாத நடிகை நான்...ஸ்ருதிஹாசன் உருக்கம்...
நடிகை ஸ்ருதிஹாசன் இன்று தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
அதே போல் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய், அஜித், மகேஷ் பாபு, பவன் கல்யான் என அனைவருடனும் இணைந்து நடித்துவிட்டார்.
இவர் நடிப்பில் இன்னும் சில வாரங்களில் கட்டமராயுடு திரைக்கு வரவிருக்கின்றது, இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இவர் ‘நான் நடிக்க வந்த போது ஒரு சில படங்கள் தோல்வியடைந்தது.
பலரும் என்னை ராசியில்லாத நடிகை என கூறினர்,நானும் ஒரு தருணத்தில் அப்படி நினைத்தேன் பின் பவன் என்னை நம்பி கப்பர் சிங் படத்தில் நடிக்க வைத்தார்.
அந்த படத்தின் வெற்றிக்கு பிறகே எனக்கு பட வாய்ப்பு குவிந்தது’ என கூறியுள்ளார்.