Asianet News TamilAsianet News Tamil

பிரபல தமிழ் சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை…. கணவன் – மனைவி இடையே பிரச்சனையா ? திடுக் தகவல்…

Seriel Actress Priyanka sucide in chennai
Seriel Actress Priyanka sucide in chennai
Author
First Published Jul 18, 2018, 9:36 AM IST


தனியார் தொலைக்காட்சி   சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான  நடிகை பிரியங்கா சென்னையில்  உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட  பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வம்சம் தொடரில் நடித்து வந்தவர் நடிகை பிரியங்கா. இது தவிர வேறு பல சீரியல்களிலும்  பிரியங்கா நடித்து வந்தார்.

Seriel Actress Priyanka sucide in chennai

சென்னை வளசரவாக்கம் காமக்கோடி நகரில்  கணவருடன் நடிகை பிரியங்கா  வசித்து வந்தார். 32 வயதாகும் இவருக்கு குழந்தைகள் இல்லை. இது தொடர்பாக கணவன் –மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Seriel Actress Priyanka sucide in chennai

இந்நிலையில்  இவர் இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Seriel Actress Priyanka sucide in chennai

கணவன், மனைவியிடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வளசரவாக்கத்தில், தனியார் தொலைக்காட்சி தொடர் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios