Asianet News TamilAsianet News Tamil

பம்பர நடிகையை ஒரே ராத்திரியில் பதம் பார்த்த ஹீரோ!! புரட்சி வசனம் பேசிய இவரோட அந்தரங்கம் இவ்வளவு கேவலமா?

செக்ஸ் ஒரு விஷயமே அல்லாத மேலை நாடுகளில் அரசு  உயர் பதவியில் இருக்கும் நபர் ஒழுக்கமாக இருக்க வேண்டும்! என்பது திடமான சிந்தனை. ஆனால் கலவி! என்பது இலை மறை காயாகவே இருக்க வேண்டும் என்று கற்பிக்கப்படும் நமது தேசத்திலோ தலைவர்கள் ‘அந்த விஷயத்தில்’ எத்தனை தறுதலைகளாக இருந்தாலும் தவறில்லை என்று ஏற்றுக் கொள்ளப்படுவது ஆகப்பெரிய துரதிர்ஷ்டம். 

Secrets revealed 90's Hero's Romance stories
Author
Chennai, First Published Oct 13, 2018, 10:29 AM IST

செக்ஸ் ஒரு விஷயமே அல்லாத மேலை நாடுகளில் அரசு  உயர் பதவியில் இருக்கும் நபர் ஒழுக்கமாக இருக்க வேண்டும்! என்பது திடமான சிந்தனை. ஆனால் கலவி! என்பது இலை மறை காயாகவே இருக்க வேண்டும் என்று கற்பிக்கப்படும் நமது தேசத்திலோ தலைவர்கள் ‘அந்த விஷயத்தில்’ எத்தனை தறுதலைகளாக இருந்தாலும் தவறில்லை என்று ஏற்றுக் கொள்ளப்படுவது ஆகப்பெரிய துரதிர்ஷ்டம். 

நம் நாட்டைப் பொறுத்தவரையில் பல மரம் கண்டவந்தான் மிகப்பெரிய தச்சனாக போற்றப்படுகிறான். அதுவும் பாலியல் என்பது ஒரு பண்டமாகவே பார்க்கப்படும் சினிமா துறையை சேர்ந்தவன், திராவிட நெய்யை தடவி ஜனநாயக அல்வா ஒன்றை கிண்டித் தந்தானென்றால் அந்த நாயகனை ‘புரட்சியாளன்’ என்று கூச்சமே இல்லாமல் அழைப்பதற்கு தயங்காத கூட்டம் நம்முடையதல்லாவா. அப்படித்தான் அந்த மனிதர் புரட்சியாளரானார். பேச்சு முழுக்க ஆண்டவன் மறுப்பு மிளிரும், ஆனால் கரன்ஸியை நீட்டினால் பூணூல் கட்டிக் கொண்டு நடிக்கக் கூட கவலையே படமாட்டார். அவ்வளவு பெரிய புரட்சிக்காரன்.

சரி சித்தாந்தத்தில்தான் சறுக்கல் இருக்கிறது! ஊருக்கு ஒரு பேச்சு, தன் தொழிலுக்கு மறுபேச்சு என்றிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய படங்களும் சமுதாயத்துக்கு எந்த வகையிலும் உருப்படியான கருத்தை தருபவையில்லை. ஆனால் காமம் உச்சத்தில் நிற்கும் காதல் காட்சிகளில் நடிப்பதில் அண்ணனிடம் அவனவன் பிச்சை எடுக்க வேண்டும். ஒரு மார்க்கமான டூயட் காட்சிகளென்றால் பின்னி எடுத்து விடுவார் பின்னி. கிட்டத்தட்ட ஷகிலா படத்துக்கான டீஸர் ரேஞ்சுக்கு அமைந்துவிடும் இவரது சில படங்களின் பாடல்கள். 

இவரது பரந்த கைகளுக்குள் சிக்கி பழஜூஸ் ஆகாத நடிகைகளே 80, 90 களில் இல்லை. வெர்டிகிளாக வளராவிட்டாலும் கூட அரிசாண்டலாக பெருத்திருந்த சுலோ நடிகையிடம் ஸ்லோவாக தொடங்கிய இவரது ஆட்டம் அடுத்தடுத்து ஏகப்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியது. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக ஃபீல்டில் நின்று போட்டுத்தள்ளிக் கொண்டிருக்கிறார் விக்கெட்டுகளை. இவரது படம் நயா பைசாவுக்கு பெறாமல் பிளாப் ஆனாலும் கூட அந்தப் படத்தில் நடிக்கையில் அம்மணிகளை அலேக்காக ‘அந்தர்’ பண்ணிய வகையில் அண்ணனின் டார்கெட்டெல்லாம் செம்ம ஹிட்டுதான். 

ஸ்லோ, சரிசரி, தாதா, தாதா வோட யக்கா, ஃபிஷ், பூவு, சித்தி, முண்டக்கன்னி யக்கா, நித்தி ஜோடி, வானு, பம்பரமுன்னு பஅண்ணன் அடிச்சு விளையாடிய களங்களை நோக்கினீர்களென்றால்  நொந்து நூடுல்ஸாயிடுவீங்க. அம்புட்டு நீளமான லிஸ்ட்டு அது. அண்ணனுக்கு டாப்பில் ஒண்ணுமில்லையென்றாலும் கேப்பில் இருக்கும் மச்சம் ரொம்ப உச்சம். அதான் எம்மாம் சிறிய குருவியாகினும் இந்த மச்சானுக்கு மடிஞ்சுடும். 
சினிமா வூட்டுக்குள் நடத்தும் வேட்டைகள் அடங்காதுன்னு சொல்லி, வெளிப்புற ஷூட்டிங் வரும் வேளைகளில் அந்தந்த ஏரியாக்களில் இருக்கும் ‘அந்த மாதிரி’ குருவிகளையும் கூப்பிட்டு வெச்சு கூத்தடிப்பது இந்த நெட்ட கொக்கு அங்கிளின் நெடுநாள் பொழுதுபோக்கு. 

இவரும் அந்த சித்தாந்த இயக்குநரும் ஏகபோக நண்பர்கள். ஒரு முறை அவரது டைரக்‌ஷனில் நடித்துக் கொண்டிருந்த படத்துக்காக ஆச்சியூர் பகுதியில் கரை ஒதுங்கினார்கள். ஒரு நாள் ஷூட்டிங் முடிந்து பேக்-அப் ஆனதும் ரெண்டு பேரும் மப்பும் மந்தாரமுமாக ஒரு தோட்டத்துப் பக்கம் ஒதுங்கினார்கள்.  இளநீரோடு சேர்த்து மல்லையா கம்பெனி தீர்த்தத்தையும் மிக்ஸ் பண்ணி உள்ளே இறக்க, மிதமிஞ்சிவிட்டது உணர்ச்சி. உடம்பு முறுக்கேறி நிற்க, ஏதாச்சும் பண்ணியே ஆகணும் எனும் நிலை. 

’ஏங் மாம்ஸு போன தடவை மீட் பண்ணீங்களே அந்த அம்மணிய வரச்சொல்லட்டுமா?’ என்று தோட்டத்து மாப்பிள்ளை  மெதுவாக பிட்டை போட்டார். ஹீரோவோ ‘அட நீங்க வேற! போங்க மாப்ள. பார்த்த படத்தையே எத்தன தடவதான் பார்க்குறது? சி.டி. தேய்ஞ்சு, சிக்கலாகிடும்.
 வாழ்க்கைன்னு இருந்தா ஒரு வெரைட்டி வேணாமாய்யா? அது கூட இல்லாட்டி கெரகம் இந்த வாழ்க்கையை வாழ்ந்து என்னதான் பிரயோசனம்?” என்று நேக்காக பிட்டை போட்டார். 

காமத்தில் கில்லி! என்றாலும் கர்லா கட்டைகளை சுற்றி, உடம்பை ச்சும்மா தேக்காட்டமா வெச்சிருப்பதில் அங்கிள் செம்ம தெளிவு. தோட்டத்தில் கிறக்கம் மித மிஞ்சிய நிலையில் அப்படியே காலாற நடந்தவர்  கர்லா கட்டை எதுவும் இல்லாத நிலையில், தோட்டத்தில் கிடந்த டிராக்டரின் பெரிய டயர் ஒன்றை தூக்கி தரதரவென தட்டாமாலை சுற்றினார். 

இவரை ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டிருந்த கோழிப்பண்ணை பணிப்பெண்கள் சிலர் அசந்து போனார்கள். அதிலும் ஒரு பெண் தில்லாக கையே தட்டிவிட்டார். அண்ணனின் பார்வை அவர் மேல் பாய்ந்தது. 

பம்பர ஹீரோயின் பனைமரத்தில் பாதி கறுப்பு கலரில் இருந்தா எப்படியிருக்கும் அப்படி இருந்தார் அந்த பெண். ’ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பப்பா! என்று எவனும் எகிடுதகிடாக மெர்சலாகும் வண்ணம் எடுப்பான, அளவான, அம்சமான உடல்வாகு. நம்மாளு கெறங்கிவிட்டார் கெறங்கி. 

தோட்டத்து ஓனரிடம் சொல்ல, அவரோ ‘அது ரொம்ப கறார் ஆன பொண்ணாச்சே. வெளிப்படையா பேசும் ஆனால் இதுக்கெல்லாம் சம்மதிக்காதுங் மாம்ஸ்!’ என்றார். அப்போ சரி, நானே பேசிக்கிறேன்! என்று விறுவிறுவென வீரநடை போட்டவர், கொஞ்சங்கூட கூச்சமில்லாமல், தன் கெத்தையும் பற்றிக் கவலைப்படாமல் அந்தப் பெண்ணிடம் ஜாலியாக பேச்சு கொடுத்து சீன் போட்டார். அடுத்த சில நிமிடங்களில் நெட் ஒர்க் கரெக்டாக ஒர்க் அவுட் ஆனது. அன்னைக்கு ராத்திரிக்கே ரகசிய மீட்டிங்குக்கு ஓ.கே.யானது பொண்ணு. 

கோழிகளுக்கு சாப்பாடு போடுகின்ற, ஒரு வெடக்கோழியை குழம்பாக்கி ருசிக்கப் போகும் குஷியில் எக்ஸ்ட்ரா ரெண்டு இளநீரை போட்டார் ஸ்டார் அங்கிள். மதமதப்பு மிஞ்சிய நிலையில், அந்த டைரக்டர்  கேட்டார் ‘என்ன சொல்லி அத கவுத்த?’ என்று அதற்கு நம்மாளோ “நான் அந்தப் புள்ளட்ட சொன்னேன் ‘நான் எத்தனையோ செவத்த புள்ளைங்க கூட டூயட் ஆடியிருக்கேன் கண்ணு. ஆனா நம்ம மண்ணுக்கேத்த கலரு நீதான். உன் கால் தூசிக்கு கூட அந்த பிளவர் நடிகையெல்லாம் சமமாக மாட்டா!’ன்னு எடுத்து விட்டேன். அசந்துடுச்சு பொண்ணு.” என்று சூட்சம ரகசியத்தை போட்டுடைத்தார். 

இயக்குநருக்கு ஏக அதிர்ச்சி, இதே டயலாக்கைதான் பம்பர நடிகையிடம் சொல்லி போன ஷூட்டிங்கில் கவிழ்த்தார். இப்போ அவங்க எல்லாரையும் அடகு வெச்சு, ஒரு கோழியை பிரியாணியாக்கிட்டாரே! என்பதுதான் காரணம். 

அட பிரியாணி போடுறதுன்னு முடிவு பண்ணின பிறகு அது செவத்த கோழியா இருந்தாலென்ன, கறுத்த கோழியா இருந்தாலென்ன? உரிச்சு, உல்லல்லாலா பாடிட்டு போயிட்டே இருக்க வேண்டிதானே!

Follow Us:
Download App:
  • android
  • ios