சினிமாவில் செக்ஸ் தொல்லை...! பொய் சொல்கிறார் ரகுல்... மோதலில் ஈடுப்பட்ட நடிகை...!
சினிமாவில் 'செக்ஸ்' தொல்லைகள் இருப்பதாக இந்தி, தெலுங்கு, மலையாள நடிகைகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை பெரிய தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் படுக்கைக்கு அழைப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தென்னிந்திய மொழி படம் ஒன்றில் நடித்த போது, பிரபல நடிகர் ஒருவர் அவருடைய கால்களை தடவி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதனால் அவரை ஓங்கி அறைந்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் பாலியல் தொல்லைகளை நடிகைகள் தைரியமாக வெளியில் சொல்ல முன்வர வேண்டும் என்றும் அப்போதுதான் இந்த குற்றங்கள் குறையும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தற்போது தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவது இல்லை என்று கூறி முற்றிலும் மறுத்தனர். இது குறித்து அவர் தெரிவிக்கையில், 'வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக கூறப்படுவது உண்மைக்கு மாறானது. அப்படி எந்த தவறும் பல உலகில் நடக்கவில்லை. நான் 4 வருடமாக சினாவில் இருக்கிறேன். எனக்கு அது மாதிரி அனுபவங்கள் ஏற்பட்டது இல்லை என தெரிவித்தார்.
இதற்கு பிரபல தெலுங்கு நடிகையான மாதவி லதா எதிர்ப்பு தெரிவித்ததுடன் ரகுல் ப்ரீத் சிங்கை கண்டித்தும் இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்.. சினிமாவில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலைமை இருக்கிறது. ரகுல் அப்படி எதுவும் இல்லை என்று கூறுவது ஏற்க முடியாததாக உள்ளது. அவர் பொய் சொல்லுகிறார்.
செக்ஸ் தொல்லைகளை வெளிப்படுத்தினால் பட வாய்ப்பு கிடைக்காது என்பதாலும், படத்தில் இருந்து ஒதுக்கி விடுவார்கள் என்பதாலும் இதுபோன்ற சம்பவங்களை வெளியில் சொல்ல நடிகைகள் தயங்குகிறார்கள். ஹாலிவுட் நடிகைகள் கூட பாலியல் தொல்லைக்கு எதிராக ஒன்றிணைந்து இருக்கிறார்கள், ஆனால் அந்த நிலைமை இங்கு இல்லை என்பது துரதஷ்டம் என தெரிவித்துள்ளார்.