எம்.ஜி.ஆரை தொடர்ந்து இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்தும் பிரபுசாலமன்...?
நடிகர் விக்ரம் பிரபு அறிமுகமாகிய திரைப்படம் 'கும்கி' இந்த படத்தை, காடு, கடல் என பெரும்பாலும் இயற்கையை மையமாக வைத்து இயக்கி வரும் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியிருந்தார்.
முழுக்க முழுக்க மலைவாழ் மக்களை பின்னணியில் இப்படம் உருவாகியிருந்தது. மேலும் வணிகரீதியாகவும் 'கும்கி' திரைப்படம் நல்ல வசூலை ஈட்டியது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.
முன்னதாகவே படப்பிடிப்பு தொடங்கப்பட்டாலும் இப்படத்தில் பணிபுரியும் கலைஞர்கள், நடிகர்கள் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால், தற்பொழுது அந்த படத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாயகனாக மதியழகன் என்பவர் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாக வில்லை. மற்றும் வில்லனாக ஹரிஷ் பெராடி, ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன்,மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள்.
டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சிவ சமுத்திரம் அருவியில் நடைபெற்று வருகிறதாம். எம்ஜிஆர் அவர்கள் நடித்த 'இதயக்கனி' திரைப்படத்திற்கு பிறகு இந்தப் படம் தான் இங்கு படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.