Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதியால் பலமுறை அடி வாங்கி இருக்கிறேன்...! ஏன்..? கண்ணீரோடு கூறிய பிரபு..!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டு, தற்போது அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தின் மூலம் மெரினா கடற்கரைக்கு கொண்டு செலப்படுகிறது. 
 

prabau about the arunanithi

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டு, தற்போது அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தின் மூலம் மெரினா கடற்கரைக்கு கொண்டு செலப்படுகிறது. 

மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் திமுக தலைவர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், அவரை பற்றி மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில் தன்னுடைய குடும்பத்துடன் வந்து கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் பிரபு... செய்தியாளர்களிடம் பேசுகையில் "என் அப்பாவுக்கும் திமுக  தலைவர் கருணாநிதிக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. 

வாய் தவறி கூட கருணாநிதி என்று அவர் பெயரை சொல்லிவிட்டால் அப்பா என் தலையிலேயே அடிப்பார். அப்படி பல முறை அடி வாங்கி இருக்கிறேன். அதனால் நாங்கள் எப்போதுமே பெரியப்பா என்றே அழைத்து வந்தோம்.

என் தந்தையின் திருமணத்தின் போது பெரியப்பா தான் என் அப்பாவிற்கு மாப்பிள்ளை தோழனாக இருந்தார். திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாங்கள் பொக்கிஷமாக வைத்துள்ளோம். அந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர், கண்ணதாசன், தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் ஆகியோர் உள்ளனர் என கூறினார்.

இதைதொடர்ந்து பேசிய பிரபு அடிக்கடி பெரியப்பா பற்றியும் அவருடன் பழகிய நாட்களைப் பற்றியும் பேசுவார். அரசியல் விஷயத்தில் மாற்று கருத்து இருந்தாலும் எங்கள் அன்பு மாறாது என்று கூறுவார்.

மேலும் எப்படி நாங்கள் சிவாஜி அப்பாவை மிஸ் பண்ணுகிறோமோ, அதே போல் கலைஞர் பெரியப்பவையும் மிஸ் பண்ணுவோம். எப்போதும் அப்பாவும், பெரியப்பாவும் நம்முடன் தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தமிழ் வாழும் வரை அவரின் நினைவுகள் வாழும் என்று கண்ணீரோடு கூறியுள்ளார் பிரபு. 

Follow Us:
Download App:
  • android
  • ios