Asianet News TamilAsianet News Tamil

’விருமாண்டி’ சண்முகராஜனை எதற்காக மன்னித்தார் தெரியுமா ‘ஓ போடு’ ராணி

'நந்தினி’சீரியல் மூலம் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வருவதால் அவர்களது நலனை கருத்தில் கொண்டு, எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த நடிகர் சண்முகராஜனுக்கு எதிரான புகாரை வாபஸ் பெற்றேன்’ என்கிறார் நடிகை ராணி.

Nandhini serial actress... rani complains Withdraw
Author
Chennai, First Published Oct 16, 2018, 9:36 AM IST

'நந்தினி’சீரியல் மூலம் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வருவதால் அவர்களது நலனை கருத்தில் கொண்டு, எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த நடிகர் சண்முகராஜனுக்கு எதிரான புகாரை வாபஸ் பெற்றேன்’ என்கிறார் நடிகை ராணி. கதாநாயகியாக அறிமுகமாகி, சில குத்துப்பாடல்கள் மூலம் பிரபலமாகி, இன்று சீரியல்கள் மூலம் தமிழ்ப்பெண்கள் சமூகத்தை கண்ணீர் சிந்த வைத்துக் கொண்டிருப்பவர் ‘ஓ போரு’ ராணி.

 Nandhini serial actress... rani complains Withdraw

’நந்தினி’ சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோது சண்முகராஜன் கன்னத்தில் அறைவது போல் நடிக்கவேண்டிய காட்சியில் ராணி பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு ஓங்கி அறைந்ததாகவும்,உடனே டைரக்டர் ‘கட்’ சொன்னபிறகும் சண்முகராஜன் ராணியை பதிலுக்கு அறைந்ததாகவும், தன் மனைவியை அறைந்த சண்முகராஜனை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ராணியின் கணவர் பிரஷாந்த் பதிலுக்கு அறைந்ததாகவும், பிரஷாந்தை மறுபடியும் சண்முகராஜன் அறைந்ததாகவும் ஏகப்பட்ட அறைகள் அடிபட்டன.

இதைத்தொடந்து நடிகை ராணி, சண்முகராஜன் தனக்கு படப்பிடிப்பு சமயங்களில் பாலியல் தொந்தரவு தந்ததாக செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை உண்டாக்கி படப்பிடிப்பை நிறுத்தினார். Nandhini serial actress... rani complains Withdraw

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த ‘நந்தினி’  தொடர் இயக்குநர் சண்முகராஜனை கையோடு செங்குன்றம் காவல் நிலையத்துக்கு அழைத்துப்போய் ஒரு ‘அறை’க்குள் வைத்து இருவரையும் சமாதானப்படுத்த, சண்முகராஜன் ராணியிடம் மன்னிப்புக்கேட்க, நந்தினி சீரியலால் வாழ்ந்து வரும் அந்த தொலைக்காட்சி குடும்பத்தினர் உட்பட 350 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு சண்முகராஜனை மன்னித்து பாலியல் பலாத்காரத்தை வாபஸ் பெற்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios