தன்னை விட 12 வயது இளைய நடிகரை ரகசிய மணம் புரியப்போகும் கவர்ச்சி நடிகை...
இந்நிலையில் இவரும் போனிகபூரின் மகனும் பிரபல நடிகருமான அர்ஜுன் கபூரும் காதலிக்கத் தொடங்கினர். ஒன்றாக விழாக்களுக்குச் சென்று வந்தனர். இது தொடர்ந்து கிசுகிசுவாக வெளியானாலும் இருவரும் காதலை வெளிப்படையாகச் சொல்லவில்லை. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மலைக்காவுக்கு வயது, 45. அர்ஜுனுக்கு வயது 33.
லேட்டஸ்ட் ட்ரெண்டின் தொடர்ச்சியாக தன்னை விட 12 வயது இளையவரும் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரின் மகனுமான அர்ஜூன் கபூரை கவர்ச்சி நடிகை மலைக்கா அரோரா திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
பிரபல இந்தி நடிகை, மலைக்கா அரோரா. மணிரத்னத்தின் ’உயிரே’ படத்தில் ’தக்க தைய்ய தைய்யா தைய்யா தைய்யா’பாடலுக்கு ஆடியவர் என்று சொன்னால் சுலபமாய் ஞாபகத்துக்கு வருவார். இவர் இந்தி ஹீரோ சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் இருக்கிறார். நட்சத்திர தம்பதிகளான இவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து, விவாகரத்து பெற்றனர். மகன் அர்ஹான் தந்தையுடன் வசித்து வருகிறார். தனியாக வசித்து வந்த மலைக்கா, டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் இவரும் போனிகபூரின் மகனும் பிரபல நடிகருமான அர்ஜுன் கபூரும் காதலிக்கத் தொடங்கினர். ஒன்றாக விழாக்களுக்குச் சென்று வந்தனர். இது தொடர்ந்து கிசுகிசுவாக வெளியானாலும் இருவரும் காதலை வெளிப்படையாகச் சொல்லவில்லை. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மலைக்காவுக்கு வயது, 45. அர்ஜுனுக்கு வயது 33.
இந்த காதல் குறித்து இருவருமே இதுவரை எதுவும் கூறவில்லை என்ற நிலையில் வரும் 18 ஆம் தேதி இவர்கள் கோவாவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்காக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அன்றைய தினம் வேறு வேலை எதையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தங்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாக, கூறப்படுகிறது. இவர்கள் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி மலைக்காவிடம் கேட்டபோது, எங்கள் திருமணம் பற்றிய செய்தி வேடிக்கையான ஒன்று. அதில் உண்மையில்லை. வதந்திதான். இதுபற்றி வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று எல்லா நடிகைகளையும் போலவே மறுக்கிறார்.
கோலிவுட்டில் நடிகை நயன்தாராவையும் விக்னேஷ் சிவனையும் எப்படி தனித்தனியாகப் பார்க்கமுடியாதோ அதே அளவுக்கு ஒட்டிக்கொண்டே கட்டிக்கொண்டே திரிபவர்கள் மலைக்காவும் அர்ஜூம் கபூரும் என்பது குறிப்பிடத்தக்கது.