Asianet News TamilAsianet News Tamil

அஜித்தைப் பார்க்க திரண்ட கூட்டம்... தடியடி நடத்தி கலைத்த போலீஸ்... விமானநிலைய வீடியோ

விமான நிலையத்தின் மற்றொரு பகுதியில் அஜித் வெளியே வந்தபோது ரசிகர்கள் தடுப்பு வேலிகளை தாண்டி குதித்து முண்டியடித்து சென்றதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து அஜித்தை காரில் எற்றி அனுப்பி வைத்தனர்.

தக்ஷா குழுவின் அடுத்த திட்டத்திற்காக ஏரோமாடலிங் குறித்து ஆராய்ச்சி செய்ய  ஜெர்மனி சென்ற அஜித் அங்குள்ள வாரியோ ஹெலிகாப்டர் நிறுவன தலைவர் கிறிஸ்டன் ஜோட்னரை சந்தித்து ஆலோசனைகளை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.

ஜெர்மன் நாட்டில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்தை காண ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தினர். 

அஜித்தை பார்த்து ரசிகர்கள், விமான பயணிகளை வரவேற்க வந்தவர்கள் திரண்டதால், காரில் ஏற முடியாமல் அஜித் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார். அவருடன் ரசிகர்களும் விமான நிலையத்திற்குள் வந்ததால் அவர்களை மத்திய தொழிற்படை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

பின்னர் விமான நிலையத்தின் மற்றொரு பகுதியில் அஜித் வெளியே வந்தபோது ரசிகர்கள் தடுப்பு வேலிகளை தாண்டி குதித்து முண்டியடித்து சென்றதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து அஜித்தை காரில் எற்றி அனுப்பி வைத்தனர்.

இந்த செய்தி ஒரு பக்கம் வேதனையாக உள்ளது ஒரு பக்கம் சிரிப்பாகவும் இருக்கிறது அஜித்க்கு விளம்பரம் பிடிக்காது அப்படி இருக்கும் போது அஜித் ரசிகர்கள் எப்படி விமான நிலையத்துக்கு வந்தார்கள் யார்? இந்த தேதியில் அவர் சென்னை வருவதை சொன்னார்? இதற்க்கு முன் எத்தனையோ முறை அஜித் வெளிநாட்டுக்கு போய்விட்டு சென்னை வந்துள்ளார். அப்போது எல்லாம் இந்த மாதிரி எந்தவித பிரச்சனையோ கலவரமோ நடக்கவில்லை.

ஆனால் இப்போது நடந்ததுக்கு யார் காரணம் என்ன? இதுவும் ஒரு விளம்பர யுக்தியா இல்லை ஒரு சிலர் செய்த தவறை மறைக்கவா இல்லை தன் பலத்தை காண்பிக்க செய்த ஏற்பாடா என போலீசார் குழப்பத்தில் உள்ளார்கள்.

Video Top Stories