கோவிலுக்கு சென்றபோது நடந்த கொடூரம்! கோர விபத்தில் நடிகை உட்பட 5 பேர் விபத்தில் பலி!
பிரபல கன்னட சீரியல் நடிகை ஷோபா பகல்கோட் மாவட்டத்தில் உள்ள, பனஷங்கரி கோவிலுக்கு, குடும்பத்துடன் சென்ற போது ஏற்பட்ட விபத்தில், அவர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல கன்னட சீரியல் நடிகை ஷோபா பகல்கோட் மாவட்டத்தில் உள்ள, பனஷங்கரி கோவிலுக்கு, குடும்பத்துடன் சென்ற போது ஏற்பட்ட விபத்தில், அவர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஷோபா 'மங்கலு ஜானகி' என்கிற சீரியலில் நடித்து பிரபலமானவர். இவர் இவருடைய குடும்பத்தினர் 8 பேருடன், கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் சென்ற கார், கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே வந்தபோது எதிரே வந்த ட்ரக் மீது மோதியது. இதில் ஐந்து பேர் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில் நடிகை ஷோபாவும் ஒருவர்.
மேலும் மூன்று பேர், பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நடிகை சோபா இறந்ததற்கு, இயக்குனர் சீதாராமன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். கோவிலுக்கு சென்ற போது, ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிர் இழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.