மகாபாரதத்தை கொச்சை படுத்தியதாக... கமல் மீது போலீசில் புகார்....
இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் அணியை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன் பெண்களை வைத்து சூதாடுவது முதல் அனைத்து தவறுகளையும் மகாபாரதம் கூறியுள்ளது போன்ற ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த கருத்தால் மகாபாரதத்தை கமல்ஹாசன் கொச்சை படுத்தியுள்ளதாகவும், இந்த கருத்து பல இந்து மக்கள் மனதை புண் படுத்துவது போல் அமைத்துள்ளது என புகார் கொடுத்துள்ளனர்.
நடிகர் கமல் அவரைப்பற்றி எந்த ஒரு தவறுதலான கருத்துக்கள் வந்தாலும் தெளிவுப்படுத்துவார், இது குறித்து என்ன தெரிவிப்பர் என்பதே அவரது ரசிகர்கள் பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.