Asianet News TamilAsianet News Tamil

சீரியலால் ஏற்பட்ட விபரீதம்! கோவிலில் பிச்சை எடுக்கும் விஜயகாந்த் பட முன்னணி இயக்குனர்!

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையோடு விளங்கிய செந்தில் ஜம்புலிங்கம். தற்போது காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பிரபல கோவிலில் பிச்சை எடுத்து வரும் சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

famous director senthil jambulingam begging in temple
Author
Chennai, First Published Sep 12, 2018, 10:30 AM IST

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையோடு விளங்கிய செந்தில் ஜம்புலிங்கம். தற்போது காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பிரபல கோவிலில் பிச்சை எடுத்து வரும் சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1980 ஆம் ஆண்டு இயக்குனர் பாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்த, 'பக்கத்து வீட்டு ரோஜா' படத்தின் மூலம் துணை இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் செந்தில். இதை தொடர்ந்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருடன் 7 வருடம் துணை இயக்குனராக பணியாற்றினார். 

famous director senthil jambulingam begging in temple

பல்வேறு போராட்டங்களை கடந்து 1988 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த், மற்றும் நடிகை ராதிகாவை  வைத்து 'பூந்தோட்ட காவல்காரன்' என்கிற ஹிட் படத்தை கொடுத்தார். இதைதொடர்ந்து நடிகர் அர்ஜுனை வைத்து 'பட்டிக்காட்டு தம்பி', 'படிச்ச புள்ள', ஸ்ரீ தேவி நடித்த 'தெய்வக்குழந்தை', சரத்குமாரை வைத்து 'தங்கமான தங்கச்சி.'காவல் நிலையம்','இளவரசன்' என தொடர்ந்து 5 படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார்.

இதுவரி தமிழில் 25 படங்களுக்கு மேல் இயக்கி வெற்றி இயக்குனராக அறியப்பட்ட இவர், கடைசியாக 2009 ஆம் ஆண்டு, 'உன்னை நான்' என்கிற படத்தை இயக்கி தயாரித்தார். இதில் வினு மற்றும் நாஸ் என்கிற புதுமுகங்கள் அறிமுகமாகினர். மிகபெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் படுதோல்வி அடைந்தது. இதனால் கடன் பிரச்சனையில் சிக்கி தவித்தார்.

famous director senthil jambulingam begging in temple

இதனால் ஒரு நிலையில், தானாகவே வெள்ளித்திரையில் இருந்து விலகி, சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். ஆரம்பத்தில் சீரியல் இயக்கி வந்த இவர் பின் சீரியல்  நடிகராகவும் மாறினார். கல்கி, ருத்ரா, தங்கம், பொன்னூஞ்சல், நாயகி என தரமான சீரியல்களை தேர்வு செய்து நடித்தார்.

இவர் சமீபத்தில் நடித்து வந்த ஒரு சீரியலில் இருந்து இவரை திடீர் என விலக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இவர், விரத்தியின் காரணமாக தற்போது காஞ்சிபுரம் அருகே இருக்கும் ஒரு கோவிலில் பிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இவரை போனின் தொடர்பு கொண்டாலும், பல சமயங்களில் போன்னை சுவிட்ச் ஆப் செய்து வைத்து விடுகிராராம். சில சமயங்களில் போனை எடுத்து தன்னை தேடவேண்டாம் என்றும் தேடினால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறி வருகிராராம்.

 famous director senthil jambulingam begging in temple

எனினும் இவருடைய குரும்பதினர் அவர்  விபரீத முடிவு எடுக்கும்முன் கண்டுபிடிக்க போலீஸ் உதவியுடன்  தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகிறார்கள். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios