Asianet News TamilAsianet News Tamil

சர்வாதிகாரி டாஸ்கால் பிக் பாஸ்-க்கு வந்த பிரச்சனை; கமலுக்கு எதிராக வழக்கு பதிவு;

case against kamal because of sarvathigari task on big boss
case against kamal because of sarvathigari task on big boss
Author
First Published Aug 2, 2018, 5:57 PM IST


பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது தரப்பட்டிருக்கும் சர்வாதிகாரி டாஸ்க் தான் தமிழக மக்கள் மத்தியில் இப்போது ஹாட் டாப்பிக். இந்த சர்வாதிகாரி டாஸ்க்கில் ஐஸ்வர்யா துத்தா, பிக் பாஸ் வீட்டின் சர்வாதிகாரியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

case against kamal because of sarvathigari task on big boss

பிக் பாஸ் வீட்டின் அனைவரையும் ஆட்டி படைத்து வரும் ஐஸ்வர்யா மீது சக போட்டியாளர்களும், மக்களும் கடுப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் சர்வாதிகாரி டாஸ்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாக தாக்கி பேசி இருப்பதாக கூறி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் லூசியா எனும் வழக்கறிஞர் புகார் கொடுத்திருக்கிறார்.

அந்த புகாரில் கடந்த ஜூலை 31 அன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்டார். அப்போது ரித்விகா, இந்த ஐஸ்வர்யாவிற்கு  தமிழ்நாட்டில் சர்வாதிகாரஆட்சி செய்தவர்களுக்கு என்ன ஆச்சு என தெரியாது என கூறியதாகவும், கமலஹாசனும் அதே போல சர்வாதிகாரி போல ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள்? என கேட்டார் என்றும் கூறி இருக்கிறார்.

case against kamal because of sarvathigari task on big boss

இவ்வாறு அவர்கள் மறைமுகமாக ஜெயலலிதாவை அவமதிப்பது போல இந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கின்றனர். கமல் இந்த நிகழ்ச்சியில்தன்னுடைய கட்சியை வளர்ப்பதற்கான பேச்சுக்களை அடிக்கடி பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் இந்த சர்வாதிகாரி டாஸ்க் திட்டமிடப்பட்டு நடந்திருக்கிறது எனவே கமலஹாசன் மீதும் இந்த நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார் லூசியா.

Follow Us:
Download App:
  • android
  • ios