Asianet News TamilAsianet News Tamil

பாவனாவிற்கு மீண்டும் வந்த புது சிக்கல்...! தனிப்படை போலீசார் விசாரணை....

bavana have a new problem
bavana have-a-new-problem
Author
First Published Mar 14, 2017, 1:18 PM IST


நடிகை பாவனா சில நாட்களுக்கு முன் திருச்சூரில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு  காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஒரு கும்பலால் கடத்தப்பட்டு  ஓடும் காரில்  பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டர்.   இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுதொடர்பாக பாவனா கொடுத்த  புகாரின் பேரில், அவரது கார் டிரைவர் மார்ட்டின், முன்னாள் டிரைவர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .

 இந்த சம்பவம் தொடர்பாக நடிகை பாவனா ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதன் விபரங்கள் சமூக ஊடகங்களில் தற்போது வெளியானதனால், புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . 

மேலும் குற்றவாளிகளை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது தாக்கல் செய்த ஆவணங்களில் போலீசார் தெரிவித்த தகவல்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. 

போலீசாரால் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்ட ஆவணங்கள்  சமூக வலைத்தளங்களில் வெளியானது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனை யார் வெளிப்படுத்தியது என்று தீவிர விசாரணை செய்து வரும் போலீசார்... தனிப்படை அமைத்து விசாரிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios