3 பெண்களுக்கும் அல்வா...! ஆர்யா அம்மா எடுத்த அதிரடி முடிவு...! அதிர்ச்சியில் குடும்பத்தினர்...!
நடிகர் ஆர்யாவின் திருமணத்திற்கு பெண் தேடி வந்த நிகழ்ச்சி எதிர்பாராத திருப்பத்துடன் முடிவடைந்தது. ஆர்யாவிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தையை எதிர்ப்பாராத ரசிகர்கள் அதிச்சி அடைந்தனர். இந்நிலையில் ஆர்யாவின் அம்மா இவருடைய முறை பெண்ணையே ஆர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்யாவின் விளையாட்டு:
கோலிவுட் திரையுலகில் பிலே பாய் என பலராலும் அறியப்பட்டவர் நடிகர் ஆர்யா. இவர் 35 வயதை கடந்தும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருந்ததால் இவரிடம் பலர் 'உங்களுக்கு எப்ப கல்யாணம்' என்கிற கேள்வியை தான் முன்வைத்து வந்தனர்.
இதனால் தான் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு பெண் தேடி வருவதாக விளம்பரம் கொடுத்தார். இவருடைய பேச்சை நம்பி 70,000 பெண்கள் இவருக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பித்தனர். இவர்களில் 16 பெண்களை தேர்வு செய்தார் ஆர்யா.
இவர்கள் அனைவருக்கும் ஒரு சில டாஸ்க் வைக்கப்பட்டு அவர்களுடன் டேட்டிங், டான்சிங், கிஸ்ஸிங், மற்றும் ஹுக்கிங் என செம ஜாலியாக விளையாடினார். எப்படியும் இதில் உள்ள ஒருவரை தான் திருமணம் செய்ய முடியும் என்ற நிலையில் வாரம் இரு பெண்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இறுதி போட்டியாளர்கள்:
இந்நிலையில் இறுதியில் தனக்கு பொருத்தமானவர்கள் என மூன்று பெண்களை தேர்வு செய்தார். எப்படியும் இவர்கள் மூவரில் ஒருவரை ஆர்யா தேர்வு செய்வார் என பலரும் எதிர்பார்த்த அந்த நாள் வந்தது. ஆனால் தான் குழப்பமான மனநிலையில் இருப்பதால் சில நாள் அவகாசம் வேண்டும் என கூறி இந்த நிகழ்சிக்கு முற்று புள்ளி வைத்தார்.
அதிரடி முடிவெடுத்த ஆர்யா அம்மா:
எப்படியும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆர்யாவிக்கு திருமணம் ஆகிவிடும் என பொறுமையாக இருந்த ஆர்யாவின் அம்மா, தற்போது இவருக்கு திருமணம் செய்தே ஆகவேண்டும் என களத்தில் இருங்கி உள்ளாராம்.
மேலும் ஆர்யாவிற்கு அவருடைய முறை பெண்ணையே திருமணத்திற்கு பேசி முடிதுள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தனை நாள் தன்னுடைய மகனின் ஆசை படி வாழ்கை அமையட்டும் என நினைத்து வந்த ஆர்யாவின் அம்மா இப்படி அதிரடி முடிவு எடுத்துள்ளது அவருடைய குடும்பத்தினருக்கே அதிர்ச்சியாக உள்ளதாகவும். விரைவில் இந்த திருமணம் குறித்து தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.
சொன்னதை காப்பாற்றுவாரா ஆர்யா:
சில நாட்கள் யோசிக்க நேரம் வேண்டும் என இறுதி நாளில் வெளியேறிய ஆர்யா, இந்த மூன்று பெண்களில் ஒருவரை திருமணம் செய்து சொன்ன வார்த்தையை காப்பாற்றுவாரா அல்லது, தன்னுடைய அம்மா பார்த்த பெண்ணை திருமணம் செய்துக்கொள்வாரா என பொறுத்திருந்து பாப்போம்.