இயக்குனருக்கு மூன்று, அஞ்சலிக்கு இரண்டு கலக்கும் விஜய் சேதுபதி...!
நடிகை அஞ்சலி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் இறைவி, இந்த படத்தை தொடர்ந்து தற்போது, இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர்.
இந்தப்படத்தை பாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்ஷ்ன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளனர்.
இயக்குனர் அருண்குமார் ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதியை வைத்து “ பண்ணையாரும் பத்மினியும் “ “ சேதுபதி “ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர், தற்போது மூன்றாவது முறையாக விஜய்சேதுபதியை இயக்க உள்ளார். இந்த படம் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கப் பட உள்ளது.
இந்த படத்தில் மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்கிறார், மற்றும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமாருடனும், இரண்டாவது முறையாக அஞ்சலியுடனும் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் தென்காசி மற்றும் மலேசியாவில் நடைபெற உள்ளது என்றும் இது ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.