விவாகரத்து பெற்ற ஒரே வருடத்தில் பிரபல தொகுப்பாளினிக்கு இரண்டாது திருமணம்..! வெளியானது புகைப்படம்..!
வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக தற்போது பார்க்கப்படுகிறார்கள் பிரபல தொலைக்காட்சியில் ஜொலிக்கும் தொகுப்பாளினிகள். மேலும் இதனையே அடித்தளமாக வைத்து தற்போது திரைப்படங்களிலும் நடிக்க துவங்கி விடுகிறார்கள்.
வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக தற்போது பார்க்கப்படுகிறார்கள் பிரபல தொலைக்காட்சியில் ஜொலிக்கும் தொகுப்பாளினிகள். மேலும் இதனையே அடித்தளமாக வைத்து தற்போது திரைப்படங்களிலும் நடிக்க துவங்கி விடுகிறார்கள்.
அந்த வகையில் தொகுப்பாளினி டிடி, பிரியா பவானி சங்கர், உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள்.
இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பிரபலமாகியவர் 'பூஜா'. பின் 'களம்' 'பீட்சா' உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு, அதே தொலைக்காட்சியில் பணிபுரிந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் கடந்த வருடம், தங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக கணவருடன் இருந்த, உறவை பரஸ்பரம்மாக முறித்து கொள்வதாக அறிவித்து அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இனி தன்னுடைய முழு கவனத்தையும் திரைப்படங்கள் நடிப்பதில் செலுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இவர் தற்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலுக்கு ஏற்ற போல், இவர் காதலருடன் மிகவும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் சமூக வலைதளைதில் நெட்டிசங்கள் சிலர் இவரை விமர்சித்து வருகின்றனர்.