"ME TOO" என கூறிய ராதிகா..! அப்படி என்னதான் சர்ச்சையோ ..!
பாலியல் தொல்லைக்கு ஆளானார் ராதிகா..! "ME TOO" என கூறியதால் சர்ச்சை...!
சமூதாயத்தில் பெண்கள் இன்றைக்கும் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு......இன்றளவும் பெண்கள் பல விதங்களில் ஆண்களால் பாதிக்கப்படுவதே...
அதிலும் குறிப்பாக,பாலியல் வன்கொடுமை,வரதட்சணை என இன்னும் பல பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. அதுவும் சினி துறையில் அதிகமாக இது போன்ற பல பிரச்சனைகளை நடிகைகள் சந்தித்து வருவதாக பல செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் தான் உள்ளது
இதற்கிடையே, ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன், நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து, சம்மந்தப்பட்ட நடிகைகள் வெளியே கூறி வரும் நிலையில், நடிகைகள் அல்லாமல், பல துறைகளைச் சார்ந்த பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இதனை தெரிவிக்கும் விதமாக, ட்விட்டரில் Me too என்ற டேக் மூலமாக, பாலியல் தொல்லைக்கு நானும் ஆளானேன் என குறிப்பிட்டு வருகின்றனர்
நடிகை ராதிகா, தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறி “Me too” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.இந்த தகவலால் சினி துறையினர் ரொம்பவே யோசிக்க ஆரம்பித்து உள்ளனர்.
பெரிய நடிகையான ராதிகாவிடம் யார் இப்படி நடந்து இருப்பாங்க என யோசிக்க தொடங்கி இருக்கிறார்கள்
தற்போது ட்விட்டர் மூலமாக யாரெல்லாம் இது போன்று me too என டேக் செய்கிறார்கள் என்பதை ஒரு பட்டாளமே உன்னித்து பார்த்துக்கொண்டிருக்கிறது