குழந்தை பிறந்த கையோடு கணவருடன் ஐஸ் கூப்பில் மிதக்கும் சூர்யா பட நாயகி பிரணிதா சுபாஷ்..
பிரசவத்திற்கு பிறகு அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் பிரணிதா சுபாஷ் தற்போது ஐஸ் கூப்பில் கணவருடன் இருக்கும் பிகினி போஸ்கள் தற்போது வைரலாகி வருகிறது.
கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுகமாகி இருந்தது. பின்னர் தமிழ் படமான சகுனியில் கார்த்திக்கு ஜோடியாக பிரணிதா சுபாஷ் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் பிரணிதா சுபாஷின் மிகப்பெரிய வெளியீடாக இருந்தது. இந்த படம் உலகம் முழுவதும் 1,150 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்து.
பின்னர் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் தந்தை சூர்யாவின் மனைவியாக நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத இவர் கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியாக இருந்தார். பின்னர் எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜானும் என்னும் இரு படங்களில் நடித்தார். பின்னர் கன்னடம், தெலுங்கு, பாலிவுட் என சென்றுவிட்ட இவர் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார்.
மேலும் செய்திகளுக்கு... சிம்பு படத்திலிருந்து ஒரு பாடலை மட்டும் துண்டாக தூக்கி கொண்டாடும் ரசிகர்கள்
மேலும் செய்திகளுக்கு...இருள் அண்ட வாய்ப்பே இல்லை..நாட்டாமை...சின்னத்தம்பியுடன் வாரிசு படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த குஷ்பூ
இதற்கிடையே பிரணிதா தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த 2021 -ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் கணவரின் பிறந்தநாள் அன்று தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த இவர் கர்ப்பகால புகைப்படங்கள் முதல் பிரசவம் வரையிலான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்திருந்தார். இவர்களுக்கு 2022 இல் ஒரு மகள் பிறந்தார்.
இந்நிலையில் பிரசவத்திற்கு பிறகு அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் பிரணிதா சுபாஷ் தற்போது ஐஸ் கூப்பில் கணவருடன் இருக்கும் பிகினி போஸ்கள் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...VTK review : "விமர்சனங்களை கேட்டு படம் பார்க்க காத்திருக்கிறேன்"..சிம்பு படத்திற்கு வாழ்த்து சொன்ன சூர்யா