Asianet News TamilAsianet News Tamil

குஷ்புவிற்கு வந்த கற்பழிப்பு மிரட்டல்... கொல்கத்தாவை சேர்ந்த நபர் மீது அதிரடி புகார்...!

தமிழகத்தில் கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட குஷ்புவிற்கு மர்ம நபர் ஒருவர் கற்பழிப்பு மிரட்டல் விடுத்துள்ளார்.

Actress Kushboo Shares she had rape threat from Phone call
Author
Chennai, First Published Aug 6, 2020, 8:58 PM IST

இந்தியாவில் சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர். அப்போது எப்படி சினிமாவில் பிசியாக இருந்தாரோ அதே போல் தான் இப்போதும், சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகலா வள்ளியாக சுற்றிச் சுழல்கிறார்.

Actress Kushboo Shares she had rape threat from Phone call

பருவ வயதான 2 மகள்களின் தாய், அன்பான கணவர் என ஹாப்பியாக போய்கொண்டிருக்கிறது குஷ்புவின் வாழ்க்கை.  தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்துள்ள குஷ்பு “அண்ணாத்த” படத்தில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.தற்போது ஊரடங்கு நேரத்தில் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் குஷ்பு, தனது பழைய நினைவுகளை தூசு தட்டி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். ஏற்கனவே மகள்களின் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கிய குஷ்பு, தானும் பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். அதன் விளைவு, சும்மா கொழு, கொழுன்னு நச்சுன்னு இருந்த குஷ்பு தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கில் மனதை கொள்ளையடிக்கிறார். 

Actress Kushboo Shares she had rape threat from Phone call

 

தமிழகத்தில் கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட குஷ்புவிற்கு மர்ம நபர் ஒருவர் கற்பழிப்பு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த எண்ணுடன் பதிவிட்டுள்ள குஷ்பு,  ''எனக்கு குறிப்பிட்ட ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்ந்து கற்பழிப்பு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. போன் செய்பவரின் பெயர் சஞ்சய் ஷர்மா என்றும், இடம் கொல்கத்தா எனவும் காட்டுகிறது. இதுகுறித்து விசாரிக்கவும் என கொல்கத்தா போலீசாருக்கு அந்த ட்வீட்டை டேக் செய்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios