அடுத்தது "என் மீது கூட புகார் வரலாம்"... ஸ்ரீ ரெட்டி விஷயத்தில் முந்திக்கொண்ட விஷால்..!
அடுத்தது "என் மீது கூட புகார் வரலாம்"... ஸ்ரீ ரெட்டி விஷயத்தில் முந்திக்கொண்ட விஷால்..!
தெலுங்கு திரை உலகை ஆட்டிப்படைக்கும் நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு தமிழர் திரை உலக ஜாம்பாவன் ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார். அதில், நடிகர் நானி மீது பாலியல் குற்றம் சுமத்திய ஸ்ரீ ரெட்டி அதற்கான ஆதாரத்தையும் வெளியிட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
மேலும், "நானி என்னுடைய சிறந்த நண்பர்....அதற்காக நான் ஆதரவு தெரிவிக்கவில்லை..ஆனால் அவர் ஆண்களிடமும் பெண்களிடம் எப்படி ஒழுக்கமாக நடந்துக்கொள்வார் என அனைவருக்குமே தெரியும்...
எந்த ஆதாரமும் இல்லாமல் இது போன்று அவர் மீது பழி சுமத்துவது சரியல்ல...நாள் என் மீது கூட புகார் வரலாம்...அவர் தொடர்ந்து பல பேர் மீது புகார் தெரிவித்து வருகிறார்.
இதனால் அவர்கள் பெயருக்கு கலங்கம் ஏற்படுகிறது என தெரிவித்து உள்ளளர்.
இதற்கிடையில், நானி தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றி நடைப்போட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு மாத காலத்தில் ஸ்ரீ ரெட்டி இந்த நிகழ்ச்சியினுள் கலந்துக்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நானி வழக்கறிஞர் மூலம் ஸ்ரீ ரெட்டி தன்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்...
இதற்கு பதில் அளித்த ஸ்ரீ ரெட்டி,"உங்கள் குடும்பத்தின் மீது சத்தியம் செய்து சொல்லுங்கள்...நீங்கள் என்னுடன் படுக்கையை பகிர்ந்துக்கொள்ள வில்லையா..? என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதனால்,தெலுங்கு திரை உலகில் ஒரு பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தான் நடிகர் விஷால், தனது நண்பர் நானிக்கு ஆதரவாக பேசியது மட்டுமல்லாமல், அடுத்தது என் மீது கூட புகார் சொல்வார் என விஷால் தெரிவித்து உள்ளார்.